மேலும் அறிய

20 வருடம் முன் பெண் சித்த மருத்துவர் கொலை! சொந்த ஊரில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த கொலையாளி!

பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவான பரோட்டா மாஸ்டரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்தனர்.

சித்த மருத்துவர் கொலை

சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் 67 வயதாகும் மலர்கொடி. சித்த வைத்திய மருத்துவரான இவர், தனது சகோதரர் ஆனந்த் குமாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 21.5.2002ல் வீட்டில் மர்மமான முறையில் மலர்கொடி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைதொடர்ந்து போலீசார் அப்போது அழகர் சாமி மற்றும் அவரது நண்பர் சக்திவேலை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ராம கிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் ராமகிருஷ்ணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.

20 வருடம் முன் பெண் சித்த மருத்துவர் கொலை! சொந்த ஊரில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த கொலையாளி!

பாஸ்ட் புட் கடை

இதற்கிடையே ராமகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கொல்லம்பட்டி பகுதியில் 'பாஸ்ட் புட்' கடை நடத்தி வருவதாக கமிஷனர் பிரகாஷ் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

ஏன் கொலை செய்தார்?

சித்த மருத்தவர் மலர்கொடி வீட்டில் ராமகிருஷ்ணனின் சகோதரர் அழகர் சாமி வேலை செய்து வந்தார். அப்போது அவரை பார்க்க மலர்கொடி வீட்டிற்கு ராமகிருஷ்ணன் சென்றுள்ளார். தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் அந்த சித்த மருத்துவர் தனியாக வசித்து வருவது தெரிய வந்தது. அவரிடம் அதிகளவில் பணம் நடமாட்டம் இருந்ததை ராமகிருஷ்ணன் கவனித்துள்ளார். பிறகு தனது சகோதரர் அழகர்சாமி மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து திட்டமிட்டு சித்த மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். 

20 வருடம் முன் பெண் சித்த மருத்துவர் கொலை! சொந்த ஊரில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த கொலையாளி!

புரோட்டா மாஸ்டர்

இந்த சம்பவத்தில் அழகர் சாமியையும், சக்திவேலையும் கைது செய்த போலீசாரிடம் இருந்து தப்பிய ராமகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்று ரோட்டு கடையில் வேலைக்கு சேர்ந்து, புரோட்டா மாஸ்டராக மாறியுள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து, இரு குழந்தைகள் என நிம்மதியாக குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். தலைமறைவாக இருந்தாலும் தங்களது உறவினர்களுடன் தொடர்பில்தான் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது, இன்னமும் போலீசார் தேட வாய்ப்பில்லை என நினைத்து சொந்த ஊருக்கு வந்து பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தி இருக்கிறார். இதன் பின்னர் தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவரை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

விசாரணை

பின்னர் ராமகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது, "போலீஸ் தேடுவதை நிறுத்தி இருப்பார்கள், இனியும் நீ கேரளாவில் தலைமறை வாக வாழ வேண்டுமா, உனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வா என உறவினர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் கூறியதை நம்பி, ராமகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டிக்கு வந்துள்ளார். பிறகு கொல்லம்பட்டியிலேயே புதிதாக 'பாஸ்ட் புட்' உணவகம் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்துள்ளார். கைது செய்யப் பட்டு தற்போது ஜாமீனில் உள்ள அழகர்சாமியிடம், போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணை நடத்திய போது, தனது சகோதரர் சொந்த ஊரில் இருப்பதாக உளறி இருக்கிறார். அதனை தொடர்ந்து தேடியபோதுதான் ராமகிருஷ்ணன் பிடிபட்டார்." என்று கூறினார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget