மேலும் அறிய

கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!

’’கொள்ளைபோன 9 சிலைகளின் மொத்த எடை 212 கிலோ. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார்  20 லட்சம்’’

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் வேதபுரி சித்பவாநந்த ஆசிரமத்துக்கு பாத்தியப்பட்ட தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவில் பின்புறம் உள்ள கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த தாயுமானவர், மாணிக்கவாசகர், வியாசர், சனகர், சனதனர், சனந்தர், சனந்தகுமாரர், நந்தி, பலிபீடம் ஆகிய 9 ஐம்பொன் சிலைகளையும், பித்தளை உண்டியலையும் அதில் இருந்த பணத்துடன் கொள்ளை அடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.


கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!

கோவில் சுற்றுச்சுவருக்கு வெளியே வனத்துறை நாற்றுப்பண்ணைக்குள் போலீசார் தேடிய போது அங்கு வியாசர் சிலையும், பலிபீடமும் கண்டெடுக்கப்பட்டன.  அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு இரும்பு கம்பியும், 190 ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, ஆசிரமத்தின் மேலாளர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதிர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பழனிசெட்டிபட்டி ஆய்வாளர் மதனகலா, சார்பு ஆய்வாளர் அசோக், சுந்தரலிங்கம், ராமபாண்டியன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!

குறிப்பாக சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவர் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருப்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அவர் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தானும், தனது பள்ளிப்பருவ நண்பரான பெரியகுளம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (23) என்பவரும் சேர்ந்து சிலைகளையும், உண்டியலையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் உண்டியலை முல்லைப்பெரியாற்றில் வீசிவிட்டு, சிலைகளை பெரியகுளம் அருகே கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப்பாதையில் உள்ள புதருக்குள் மறைத்து வைத்துள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார்.  அதன்பேரில் கும்பக்கரைக்கு போலீசார் விரைந்தனர்.


கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!

அங்கு புதருக்குள் கிடந்த 7 சிலைகளையும் போலீசார் மீட்டனர். கொள்ளையடித்த சிலைகளை மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று பதுக்கி வைத்ததாகவும் ஸ்ரீதர் கூறினார். இதையடுத்து இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளி கார்த்திக் தலைமறைவாகியுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்தும், சிலைகளை மீட்ட தனிப்படை போலிசாருக்கு தேனி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தட்சிணாமூர்த்தி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது.  


கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!

கொள்ளைபோன 9 சிலைகளின் மொத்த எடை 212 கிலோ. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார்  20 லட்சம். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்த போது, இந்த வழக்கில் கைதான ஸ்ரீதர் மீது தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சிலை கடத்தல் வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. அவர் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பான ஒரு வழக்கில் சிறையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்த போது, கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஒப்பு கொண்டார். கைதான ஸ்ரீதர் மீது திருப்பூர் மாவட்டம் அனுப்பூர் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, தென்கரை, பெரியகுளம் பகுதிகளில் திருட்டு, அடிதடி வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன எனவும் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget