மேலும் அறிய

Crime: தலைமை ஆசிரியை கொலை வழக்கு; தம்பியின் மனைவி, கள்ளக்காதலன் கைது 

இதனையடுத்து சூர்யாவையும், நதியாவையும் போலீசார் கைது செய்ததாகவும். மேலும் அவர்களிடமிருந்து 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 16 ஆயிரம், ஹார்டு டிஸ்க், 2 செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் 52. இவர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ராஜேந்திரன் ஏற்கெனவே இறந்து விட்டார். ரஞ்சிதம் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் அம்பேத்கர் பாரதி கோவையில் உள்ள  மருத்துவ கல்லூரியில் படிக்கிறார். இவரது மகள் அபிமதிபாரதி திருமணமாகி பட்டுக்கோட்டையில் வங்கி ஒன்றில் பணி செய்கிறார்.

Crime: தலைமை ஆசிரியை கொலை வழக்கு; தம்பியின் மனைவி, கள்ளக்காதலன் கைது 
 
இந்நிலையில், கடந்த 7-ந் தேதி கை, கால்களில் நரம்புகளை துண்டித்தும், வெட்டுக்காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சூர்யா (24) என்பதும், தலைமை ஆசிரியை கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

Crime: தலைமை ஆசிரியை கொலை வழக்கு; தம்பியின் மனைவி, கள்ளக்காதலன் கைது 
 
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தின் தம்பி பாண்டிவேல்முருகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நதியா(31). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. நதியாவுக்கும், சூர்யாவிற்கும் கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்த பாண்டிவேல் முருகன், குடும்ப செலவிற்கு நதியாவிற்கு பணம் அனுப்பாமல், தனது அக்காள் ரஞ்சிதத்திற்கு பணம் அனுப்பி அவர் மூலம் நதியாவிற்கு கொடுக்க சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நதியா தனது கள்ளக்காதலன் சூர்யாவுடன் சேர்ந்து ரஞ்சிதத்தை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 6-ந் தேதி இரவு 10 மணியளவில் சூர்யா, ரஞ்சிதம் வீட்டின் பின்புறம் மறைந்திருந்தார்.
 
அப்போது அங்கு வந்த ரஞ்சிதத்தை பின்னால் இருந்து வாயைப்பொத்தி கழுத்தை நெரித்தும், கை, கால் நரம்புகளை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், ரஞ்சிதம் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகை என மொத்தம் 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்தை திருடினார். மேலும் ரஞ்சிதத்தின் போனில் உள்ள பதிவுகளை அழித்து விட்டனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் திருடி சென்றுள்ளார். இதனையடுத்து சூர்யாவையும், நதியாவையும் போலீசார் கைது செய்ததாகவும். மேலும் அவர்களிடமிருந்து 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 16 ஆயிரம், ஹார்டு டிஸ்க், 2 செல்போன்களை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget