![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சிறுமிக்கு பாலியல் ஆசையை அதிகரிக்கும் பாலுணர்வு காப்ஸ்யூல்... ரத்தப்போக்கில் உயிரிழந்த பரிதாபம்!
பாலுணர்வைத் தூண்டுவது என்பது பாலியல் ஆசையை அதிகரிக்கும் ஒரு பொருளாகும். பல்வேறு தாவரங்கள், உணவுகள் மற்றும் சில இரசாயனங்களிலிருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
![சிறுமிக்கு பாலியல் ஆசையை அதிகரிக்கும் பாலுணர்வு காப்ஸ்யூல்... ரத்தப்போக்கில் உயிரிழந்த பரிதாபம்! Teenage girl sexual harrasment after giving aphrodisiac drug dies of bleeding in mp சிறுமிக்கு பாலியல் ஆசையை அதிகரிக்கும் பாலுணர்வு காப்ஸ்யூல்... ரத்தப்போக்கில் உயிரிழந்த பரிதாபம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/12/269388fa4ae948b7ec1ad99d363a2fbd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிறுமிக்கு பாலுணர்வை ஏற்படுத்தும் காப்ஸ்யூல்களைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், 17 வயது இளம்பெண் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ராஜேந்திரகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமையின் இடைப்பட்ட இரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர் யஷ்வந்த் மராவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தலைமறைவாக உள்ளார். Madhya Pradesh News: ‘என்னோட டிரஸ், நகை திருடும் கண்ணுக்கு தெரியாத திருடன்’ - பெண் புகாரால் அதிர்ந்த போலீஸ்..!
பாலுணர்வைத் தூண்டுவது என்பது பாலியல் ஆசையை அதிகரிக்கும் ஒரு பொருளாகும். பல்வேறு தாவரங்கள், உணவுகள் மற்றும் சில இரசாயனங்களிலிருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தச்சம்பவம் குறித்து ராஜேந்திரகிராம் காவல் நிலையத்தின் மூத்த காவல்துறை அதிகாரி நரேந்திர பால் கூறுகையில், சனிக்கிழமையன்று 17 வயது இளம்பெண் மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை மற்றும் சிறிய பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்தரங்க பகுதியில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.
குற்றம் செய்வதற்கு முன், சிறுமிக்கு 20-22 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர்களால் சில பாலுணர்வு காப்ஸ்யூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை (அவரது வீட்டிற்கு) திரும்பியபோது பாதிக்கப்பட்ட பெண் கடுமையான வலியில் இருந்துள்ளார். இறப்பதற்கு முன் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் உறுப்பினரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து கூறியுள்ளார்” என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 363, 366 (கடத்தல்) மற்றும் 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி ராஜேந்திரகிராம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேடியாலஜி பெண்ணை லாட்ஜூக்கு அழைத்து சென்று பல முறை டாக்டர் செய்த லீலை..!
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷாதோல் மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) டிசி சாகர், “குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க போலீஸார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவரை பிடித்து கொடுப்பவருக்கு ரூபாய் 30,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)