மேலும் அறிய

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

திருட்டுத்தனமாக இந்தியா வந்த இலங்கையர்கள், மதுரையில் பதுங்கி போலி இந்திய குடியுரிமை மூலம் கனடா செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக, மதுரை வழியே வெளிநாடு தப்ப முயன்ற 23- நபர்கள் மற்றும் முகவரை நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து கள்ளதோணி வழியாக  தூத்துக்குடிக்கு மொத்தம் 23- நபர் தப்பினர். இவர்களில் 21- நபர்கள் இலங்கை தமிழர்கள் மற்ற இருவர் இலங்கையை சேர்ந்த சிங்களவர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து  வாகனம் மூலமாக மதுரை வந்து, மதுரை கப்பலூர் அருகே உள்ள பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.


போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த நபர்களுக்கு கனடா நாட்டிற்கு அனுமதி இல்லாத நிலையில், மதுரையில் உள்ள முகவர் காசிவிஸ்வநாதன் என்பவர் மூலம் போலி ஆவணம் தயார் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிய நபர்கள், கனடாவிற்கு  உறுதியாக செல்லவேண்டும் என பல்வேறு முயற்சி எடுத்துவந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மதுரையிலேயே தலைமறைவாக இருந்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கை சேர்ந்தவர்களை நாடு கடத்த முயற்சி செய்வதாக நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரது, கட்டுப்பாட்டில் இருந்த 23 இலங்கையை சேர்ந்த வாலிபர்களையும் கைது செய்தனர்.

 

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

மேலும் அவரிடம் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை மதுரையில் தங்க வைக்க உதவியதாக தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் 23-பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையை சேர்ந்த 23-பேர் கள்ளதோணி மூலமாக மதுரைக்கு தப்பி வந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம்...,” இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் தூத்துக்குடி கடரோல பகுதியில் சுற்றி வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கடலோர பகுதியில் சுற்றுவந்தால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என மதுரை வந்தடைந்தனர். கப்பலூர் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்காத சூழலில் இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் உணவு தேவை உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி சிலர் மட்டும் வெளியே சென்று உணவு வாங்கிவந்துள்ளனர். ஆனால் இவர்கள் சுற்றிவந்தது, நக்சலைட் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தப்பி வந்த 23 மூன்று நபர்களையும் திட்டம் தீட்டி பிடுத்துவிட்டனர். இது தொடர்பாக இன்னும் பலர் சிக்கலாம்” என தெரிவித்தனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget