மேலும் அறிய

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

திருட்டுத்தனமாக இந்தியா வந்த இலங்கையர்கள், மதுரையில் பதுங்கி போலி இந்திய குடியுரிமை மூலம் கனடா செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக, மதுரை வழியே வெளிநாடு தப்ப முயன்ற 23- நபர்கள் மற்றும் முகவரை நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து கள்ளதோணி வழியாக  தூத்துக்குடிக்கு மொத்தம் 23- நபர் தப்பினர். இவர்களில் 21- நபர்கள் இலங்கை தமிழர்கள் மற்ற இருவர் இலங்கையை சேர்ந்த சிங்களவர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து  வாகனம் மூலமாக மதுரை வந்து, மதுரை கப்பலூர் அருகே உள்ள பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.


போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த நபர்களுக்கு கனடா நாட்டிற்கு அனுமதி இல்லாத நிலையில், மதுரையில் உள்ள முகவர் காசிவிஸ்வநாதன் என்பவர் மூலம் போலி ஆவணம் தயார் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிய நபர்கள், கனடாவிற்கு  உறுதியாக செல்லவேண்டும் என பல்வேறு முயற்சி எடுத்துவந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மதுரையிலேயே தலைமறைவாக இருந்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கை சேர்ந்தவர்களை நாடு கடத்த முயற்சி செய்வதாக நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரது, கட்டுப்பாட்டில் இருந்த 23 இலங்கையை சேர்ந்த வாலிபர்களையும் கைது செய்தனர்.

 

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

மேலும் அவரிடம் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை மதுரையில் தங்க வைக்க உதவியதாக தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் 23-பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையை சேர்ந்த 23-பேர் கள்ளதோணி மூலமாக மதுரைக்கு தப்பி வந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம்...,” இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் தூத்துக்குடி கடரோல பகுதியில் சுற்றி வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கடலோர பகுதியில் சுற்றுவந்தால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என மதுரை வந்தடைந்தனர். கப்பலூர் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்காத சூழலில் இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் உணவு தேவை உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி சிலர் மட்டும் வெளியே சென்று உணவு வாங்கிவந்துள்ளனர். ஆனால் இவர்கள் சுற்றிவந்தது, நக்சலைட் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தப்பி வந்த 23 மூன்று நபர்களையும் திட்டம் தீட்டி பிடுத்துவிட்டனர். இது தொடர்பாக இன்னும் பலர் சிக்கலாம்” என தெரிவித்தனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
Embed widget