மேலும் அறிய

NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?

வெறும் 24 நிரந்தர ஊழியர்களுடன் இயங்கும் என்.டி.ஏ; 15 பணியிடங்கள் காலி - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நீட், ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நாட்டின் அதிமுக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்திவரும் தேசியத் தேர்வு முகமை வெறும் 24 நிரந்தரப் பணியாளர்களுடன் மட்டுமே இயங்கி வருவதாகவும், மீதமுள்ள 15 முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு மாநிலங்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகத் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏதான் நடத்தி வருகிறது.

கல்வித்துறையின் இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தேசியத் தேர்வு முகமைக்காக அரசு மொத்தம் 39 நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 24 நிரந்தர ஊழியர்கள் ஆனால், தற்போது அங்கு 24 நிரந்தர ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

இந்த ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பிற அரசுத் துறைகளில் இருந்து மாற்றுப் பணியில் வரும் அதிகாரிகளையும், ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்படும் ஊழியர்களையும் கொண்டு என்டிஏ தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக 73 ஒப்பந்தப் பணியாளர்களும் 124 அவுட்சோர்ஸிங் பணியாளர்களும் வேலையில் உள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களில், பொது மேலாளர் (தகவல் தொடர்பு), ஒரு மூத்த ஆலோசகர், மூன்று ஆலோசகர்கள், ஐந்து மூத்த ஆலோசகர்கள், 44 ஆலோசகர்கள், ஒரு மூத்த மென்பொருள் உருவாக்குநர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் 17 இளம் தொழில் வல்லுநர்கள் உள்ளனர்.

அவுட்சோர்ஸிங் பணியாளர் குழுவில் தரவுப் பகுப்பாய்வாளர்கள், ஆலோசகர்கள், இளநிலை ஆலோசகர்கள், சட்ட உதவியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றோர் உள்ளனர்.

நிரந்தரப் பணியாளர்கள் தவிர்த்து, பாடத்திட்ட வல்லுநர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களையும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பணிகளுக்காக என்.டி.ஏ அவ்வப்போது நியமித்துக் கொள்கிறது. வினாத்தாள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு போன்ற முக்கியப் பணிகளுக்குத் தனி நிபுணர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்வு நடத்தும் மையங்கள், சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் பிற தளவாடத் தேவைகளுக்கு மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை என்.டி.ஏ முழுமையாக நம்பியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான தேர்வு முறைகேடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வலுத்து வரும் வேளையில், இவ்வளவு பெரிய பொறுப்பைக் கையாளும் ஒரு முக்கிய அமைப்பில், நிரந்தரப் பணியாளர்கள் வெறும் 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்ற தகவல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Embed widget