மேலும் அறிய

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்

தூத்துக்குடியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – பிரபல குற்றவாளி கைது

" தலையில் பலத்த காயத்துடன் மயக்கம் "

தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி ( வயது 56 ) இவரது கணவர் காளிமுத்து திருமணமான ஓராண்டிலேயே பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மகள் சத்யாவை தனியாக வளர்த்த முத்துலட்சுமி , பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

மகளுக்கு திருமணம் ஆன பிறகு , இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் , கடந்த ( ஜூலை 15 ) - ம் தேதி சத்யா வெளியூருக்கு சென்றிருந்ததால் , முத்து லட்சுமி வீட்டின் முன்புற திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். மறு நாள் அதிகாலை அப்பகுதி மக்கள் வெளியே வந்த போது , அவரது உடையில் அணிந்திருந்த சேலை கலைந்த நிலையிலும் , தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடலை வாங்க மறுப்பு

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து திரும்பிய மகள் சத்யா , தனது தாய் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் , காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி கடந்த ஜூலை 18 - ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முத்து லட்சுமியின் மகள் சத்யா மற்றும் உறவினர்கள் , தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சாதாரண மரணம் அல்ல , திட்டமிட்ட கொலை என்றும், தலையில் இருந்த பலத்த காயங்களை கருத்தில் கொண்டு வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் , பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்துலட்சுமியின் மண்டையில் மூன்று ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தது உறுதியானது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் , போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு , உதவி ஆய்வாளர்கள் முகிலரசன் மற்றும் சுப்புராஜ் தலைமையில் மூன்று தனிப் படைகளை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

பாலியல் வன்கொடுமை

சம்பவம் நடைபெற்ற பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரீகன் ( வயது 37 ) என்பவரை அடையாளம் கண்டனர். அவர் மீது ஏற்கனவே பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் , சம்பவத்தன்று ரீகன் மது போதையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார். நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் , பெண்களை பின் தொடர்ந்து பாலியல் நோக்கத்துடன் அலைந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் வீட்டின் வாசலில் தனியாக படுத்திருந்த முத்துலட்சுமியை பார்த்த ரீகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , பின்னர் சம்பவத்தை வெளியில் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் அவரது தலையில் கொடூரமாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

Advertisement

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget