லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரசின் சுழற்சி முறைப்படி உடனடியாக பணியிட மாற்றம்
சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இருந்தால், அவர்களை அரசின் சுழற்சி முறைப்படி உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்கும் முக்கிய புலனாய்வு அமைப்பாக இருப்பதால், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதைத் தவிர்த்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சுழற்சி முறையில் மாற்றுவது நல்ல நிர்வாக நடைமுறையாகக் கருதப்படுவதாகவும், இதன் மூலம் விசாரணைப் பணிகளில் மேலும் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, மாநிலம் முழுவதும், குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற முக்கிய புலனாய்வு பிரிவுகளில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் உள்ளனரா என்பதை ஆய்வு செய்து, அரசின் நடைமுறைகளுக்கு ஏற்ப சுழற்சி முறையில் பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















