மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!
சிவசங்கர் பாபா வர உள்ளதாக தகவலை அடுத்து, நீதிமன்ற வளாகத்திற்கு முன் பாபாவின் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.
![Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..! Sivashankar Baba appeared in pocso court ramarajyam devotees assembled before court to support him Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/40c0071a236f8c02842387401a8a07ac_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
![Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/0472bee92e00f8223b11d7ee52da748b_original.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.
![Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/63f11e1cab6e5a381d7c6c1206212be1_original.jpg)
இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுநர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு தற்பொழுது சென்னை நீதிமன்ற சிறை காவலில் சிவசங்கர் பாபா இருந்து வருகிறார்.
![Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/ce9c7068be67d00a5d63ed06a96aabaf_original.jpg)
இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபா மீது போடப்பட்டிருந்த போக்சோ வழக்கில் நீதிமன்ற இன்று செங்கல்பட்டு சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன் சிவசங்கர் பாபா என்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். இது குறித்த தகவலை அறிந்த சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்திற்கு முன் குவியத் துவங்கியுள்ளனர். பாபா பாபா எனவும், சங்கரம் சிவ சங்கரம் எனவும் சத்தமிட்டு வருகின்றனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
![Pocso on Sivashankar | நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்..! மந்திரங்கள் சொல்லியபடி குவிந்த ஆதரவாளர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/cdae214177880469088ce1d3a58a66f2_original.jpg)
முன்னதாக சுஷில் பள்ளி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரியைகள் பள்ளி மாணவிகளிடம் பாபாவின் ஆசீர்வாதம் கிடைத்தால் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு அழைத்துவந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion