மேலும் அறிய

சிவகங்கை லாக்கப் மரணம் தொடர்பாக 5 போலீசார் கைது, காந்திருந்த கரை வேஷ்டிகள் யார்?

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, 5 போலீசாரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

அஜித்குமார் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவரது உடல் வாங்கும் வரைம் காத்திருந்தது கரை வேஷ்டிகள் யார் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

நகை  காணவில்லை என வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்
 
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன்பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்.
 
சித்திரவதை தாங்க முடியவில்லை
 
காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு படையினரிடம் அஜித்குமார், அவனின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல் 
எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்து தருகிறேன். என்று அஜித்குமார் கூறியதை கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல்தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
 
அஜித்குமாரின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில்
 
அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்ட மட்டும் அடித்து தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். அஜித்தின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
 
5 போலீசார் கைது
 
ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு செய்யும் இடத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் கிட்டத்த 5 மணி நேரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டத்தில் உடல் 18 இடங்களில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அதே போல் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்து வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அஜித் குமார் உயிரிழப்பு தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, 5 போலீசாரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.
 
கரை வேஷ்டிகள் யார்?
 
அதே போல் அஜித்குமார் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவரது உடல் வாங்கும் வரைம் காத்திருந்தது யார் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. அவர்கள் அஜித்தின் குடும்பத்தினரை மிரட்டினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget