மேலும் அறிய

‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை... ’ ஜோதிடர் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவர் குடும்பம்!

‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் அந்த குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கே ஆபத்து,’ என ஜோதிடர் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுதூர் காந்திநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். சேலம் உருக்காலை அருகே உள்ள கொலப்பட்டியைச் சேர்ந்த ராஜா மகள் கவுசல்யா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த முதல் வருடத்தில் இவர்குளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

வெள்ளி வியாபாரியான வெங்கடேசன், ஆன்மிக நடவடிக்கைகளில் அதீத ஆர்வம் காட்டுபவராக இருந்துள்ளார். எதற்கெடுத்தாலும் ஜோதிடம் மூலம் தீர்வு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அடிக்கடி ஜோதிடம் பார்ப்பதும், ஜோதிடர்களை கூறுவதை பின்பற்றுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் வெங்கடேசன். தொழில் ரீதியாகவும் சரி, குடும்ப ரீதியாகவும் சரி, ஜோதிடர்கள் வாக்கு தான் வெங்கடேசனுக்கு தெய்வ வாக்காக இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு தொழில் ரீதியாகவும், மனரீதியாகவும் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன், ஜோதிடர் ஒருவரை சந்தித்துள்ளார். ‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் அந்த குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கே ஆபத்து,’ என ஜோதிடர் கூறியுள்ளார். அதை அப்படியே நம்பிய வெங்கடேசன், தன் குடும்பத்தாரிடம் விபரத்தை கூறியுள்ளார். குடும்ப நலன் கருதி குழந்தையை அங்கிருந்து விரட்ட முடிவு செய்த வெங்கடேசன் குடும்பத்தினர், கவுசல்யாவை கொடுமைபடுத்த துவங்கியுள்ளனர். இந்த டார்ச்சர் படலம் ஆண்டுகளை கடந்து தொடர ஆரம்பித்தது.

ஒவ்வொரு முறை அடித்து விரட்டும் போதும், இரும்பாலை காவல்நிலையத்தில் கவுசல்யா புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.  இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குழந்தையுடன் கவுசல்யாவை டார்ச்சர் செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை. இருவரையும் வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து மனமுடைந்த கவுசல்யா, தனது குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், தங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து அதனை கண்ட பொதுமக்கள், காவல் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு தகவலை பரிமாற்றம் செய்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரி உத்தரவில், சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு கவுசல்யா அனுப்பப்பட்டார். அங்கு, சம்பவம் நடந்த இடம் கொண்டலாம்பட்டி என்பதால் அங்குள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கவுசல்யா ஏமாற்றத்துடன் அங்கிருந்த புறப்பட்டார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஊதாரியாக ஊர் சுத்துறியே வேலைக்கு போடா?.. திட்டிய பெற்றோர், புரிந்து கொள்ளாமல் மகன் எடுத்த விபரீத முடிவு
ஊதாரியாக ஊர் சுத்துறியே வேலைக்கு போடா?.. திட்டிய பெற்றோர், புரிந்து கொள்ளாமல் மகன் எடுத்த விபரீத முடிவு
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
Pod Taxi: இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா டாக்ஸி அறிமுகம்; எங்கே, எப்படி செயல்படும்? பாதுகாப்பா?
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
Tamilnadu Roundup: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
இன்று இறுதி வேட்பாளர் பட்டியல், இலங்கை கடற்படை அராஜகம், வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ - 10 மணி செய்திகள்
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
Puducherry Election 2026 : 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம் - நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஓட்டு!
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
Embed widget