மேலும் அறிய

திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து  தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் அழகப்பன் (வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சமுத்திராப்பட்டியில் இருந்து சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டில் இவரும் இவரது வயதான தாய் சொர்ணம் (75) என்பவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக கொள்ளையர்கள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் இருந்த அழகப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் அதனை தருமாறு கூறி கத்தியை காட்டி மிரட்டி காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். உடனே அவர் கூச்சலிடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். அப்போது கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஆனால் அதில் ஒருவனை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தபோது  காவலர்களிடமிருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

இச்சம்பவத்தில் காயம் அடைந்த அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பிரதீப், ரூரல் டி.எஸ்.பி சிபிசாய் சௌந்தர்யன்,நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் விசாரணை செய்த நிலையில் ,  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நத்தம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக விசாரணையை தீவிர படுத்திய காவல்துறையினர்  சிசிடிவி கேமராக்கள், காரின் மாடல்,தொலைபேசி சிக்னல் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் , இச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் கொட்டக்குடியை சேர்ந்த  பிரபா(28),சாந்தகுமார்(31),முத்து வெங்கடாஜலபதி(29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அழகப்பனிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த மணிமொழியன் (45), பொன்டைப்பட்டி பாபு(41), மதுரை மாவட்டம் சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ்(39), நத்தம் அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன் (60)ஆகியோரை கைது செய்த நத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பனின் கார் ஓட்டுனராக பணிபுரிந்த மணிமொழி அழகப்பனிடம் கார் ஓட்டிக்கொண்டே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அழகப்பனுடன் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில் அழகப்பனிடம் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பணம் புழங்குவதை  தெரிந்து கொண்ட மணிமொழியன் அழகப்பன் இடம் ஓட்டுனராக பணிபுரிவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மணிமொழி தனது கூட்டாளிகளான பாக்கியராஜ், பாபு பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து அழகப்பனிடம் டபல கோடி ரூபாய் பணம் உள்ளது எனவே அவரது வீட்டில் கொள்ளை அடிக்கலாம் பிளான் போட்டுள்ளனர். இதற்காக பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம்,மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த வெள்ளையதேவர், சூத்தான் என்ற  சின்னதம்பி ஆகியோருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்து குற்ற சம்பவத்தில் இறங்கி உள்ளனர். சம்பவத்தின் போது பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

இது தொடர்பாக மணிமொழியன் பாக்கியராஜ், பாபு, பிரபாகரன்,பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம் ஆகியோரை கைது செய்த நத்தம் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் இதுதொடர்பாக  வெள்ளையதேவர் சூத்தான் என்ற சின்ன தம்பி ஆகிய இருவரை தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் கார் ஓட்டுனராக இருந்த மணிமொழியன் தான் குற்றச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தற்போது வெளிச்சம் ஆகி உள்ளது காரின் நம்பர் பிளேட் இல்லாத நிலையில் காரின் மாடலை வைத்தும்,செல்போன் சிக்னலை வைத்தும் குற்றவாளிகளை புலன் விசாரணை செய்து தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து  தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget