மேலும் அறிய

திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து  தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் அழகப்பன் (வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சமுத்திராப்பட்டியில் இருந்து சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டில் இவரும் இவரது வயதான தாய் சொர்ணம் (75) என்பவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக கொள்ளையர்கள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் இருந்த அழகப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் அதனை தருமாறு கூறி கத்தியை காட்டி மிரட்டி காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். உடனே அவர் கூச்சலிடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். அப்போது கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஆனால் அதில் ஒருவனை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தபோது  காவலர்களிடமிருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

இச்சம்பவத்தில் காயம் அடைந்த அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பிரதீப், ரூரல் டி.எஸ்.பி சிபிசாய் சௌந்தர்யன்,நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் விசாரணை செய்த நிலையில் ,  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நத்தம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக விசாரணையை தீவிர படுத்திய காவல்துறையினர்  சிசிடிவி கேமராக்கள், காரின் மாடல்,தொலைபேசி சிக்னல் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் , இச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் கொட்டக்குடியை சேர்ந்த  பிரபா(28),சாந்தகுமார்(31),முத்து வெங்கடாஜலபதி(29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அழகப்பனிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த மணிமொழியன் (45), பொன்டைப்பட்டி பாபு(41), மதுரை மாவட்டம் சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ்(39), நத்தம் அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன் (60)ஆகியோரை கைது செய்த நத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பனின் கார் ஓட்டுனராக பணிபுரிந்த மணிமொழி அழகப்பனிடம் கார் ஓட்டிக்கொண்டே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அழகப்பனுடன் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில் அழகப்பனிடம் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பணம் புழங்குவதை  தெரிந்து கொண்ட மணிமொழியன் அழகப்பன் இடம் ஓட்டுனராக பணிபுரிவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மணிமொழி தனது கூட்டாளிகளான பாக்கியராஜ், பாபு பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து அழகப்பனிடம் டபல கோடி ரூபாய் பணம் உள்ளது எனவே அவரது வீட்டில் கொள்ளை அடிக்கலாம் பிளான் போட்டுள்ளனர். இதற்காக பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம்,மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த வெள்ளையதேவர், சூத்தான் என்ற  சின்னதம்பி ஆகியோருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்து குற்ற சம்பவத்தில் இறங்கி உள்ளனர். சம்பவத்தின் போது பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.


திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?

இது தொடர்பாக மணிமொழியன் பாக்கியராஜ், பாபு, பிரபாகரன்,பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம் ஆகியோரை கைது செய்த நத்தம் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் இதுதொடர்பாக  வெள்ளையதேவர் சூத்தான் என்ற சின்ன தம்பி ஆகிய இருவரை தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் கார் ஓட்டுனராக இருந்த மணிமொழியன் தான் குற்றச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தற்போது வெளிச்சம் ஆகி உள்ளது காரின் நம்பர் பிளேட் இல்லாத நிலையில் காரின் மாடலை வைத்தும்,செல்போன் சிக்னலை வைத்தும் குற்றவாளிகளை புலன் விசாரணை செய்து தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து  தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget