மேலும் அறிய

ஓசூர்: தொடரும் கட்டப்பஞ்சாயத்து: கண்டுகொள்ளாத காவல்துறை? விவசாயிகள் புகார்!

ஓசூர் அருகே ஊர்கவுண்டர் தலைமையில் தொடரும் கட்டப்பஞ்சாயத்து, நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராம ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டபஞ்சாயத்து சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதில் கணவரை இழந்த பெண் உட்பட பலர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது மாரண்டப்பள்ளி கிராமம் இந்த கிராமத்தில்தான் தொடர்ந்து ஊர் கவுண்டர் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. கட்டப்பஞ்சாயத்தில் கணவரை இழந்த பெண் உட்பட பலர் இந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்தால் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் ஊர் கவுண்டர் மேலும் பண்டிகை காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி அவ்வாறு தொடர்பு கொண்டால் அபராத பணம் கட்ட சொல்லி வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

 


ஓசூர்: தொடரும் கட்டப்பஞ்சாயத்து: கண்டுகொள்ளாத காவல்துறை? விவசாயிகள் புகார்!

 

 

கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண் கிருஷ்ணவேணி தெரிவிக்கையில்;

பெங்களுரில் நான் இருந்தபோது 13வருடங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்தவிட்டார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் தங்கள் குடும்ப சொத்தான விவசாயத்தை பராமரிக்க வந்தபோது கணவரின் அண்ணார் சின்ன பையன் என்பவருக்கும் எங்களுக்கும் நிலத்தில் உள்ள தென்னைமரம் சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஊர் கவுண்டர் சந்திரன் மற்றும் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்படாததால் நான் சூளகிரி காவல் நிலையம் சென்றேன். நாங்கள் இருக்கும் போது காவல் நிலையத்திற்கு எதற்கு சென்றாய் என தகாத வார்த்தையில் பேசியதோடு அப்போதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதோடு ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். என்னுடைய தோட்டத்திற்கு வரும் வேலையாட்களையும் பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தார். 

 


ஓசூர்: தொடரும் கட்டப்பஞ்சாயத்து: கண்டுகொள்ளாத காவல்துறை? விவசாயிகள் புகார்!

 

இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றொரு விவசாயி சங்கரன் மகள் வேறு ஜாதி பையனுடன் திருமணம் செய்து கொண்டதால் அந்தக் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் பெண்ணிடம் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் ஊர் கவுண்டர் நிபந்தனை விதித்து அவருக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவியையும் கூலி வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதேபோல் விவசாயி கிருஷ்ணன் மற்றும் கோவில் பூசாரியும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார் ஊர்கவுண்டர். இதுபோல் தொடரும் அந்த கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினால் கட்டப்பஞ்சாயத்து எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து ஊர் கவுண்டர் சந்திரன் மற்றும் சிலர் சென்று விடுகிறார்கள்.இந்த கட்டபஞ்சாயத்து தற்போது 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே சம்பந்தபட்ட ஊர்கவுண்டர் அவருக்கு உறுதுணையாக செயல்படும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget