மேலும் அறிய

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி கேட்ட யூடியூபர்: சுட்டுக் கொன்ற பாதுகாவலர்

இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி எழுப்பி வீடியோ எடுத்த யூடியூபரை பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

IND vs PAK, T20 2024: பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாதுகாவலரால் சுட்டுக் கொன்ற சம்பவம்  ​​பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: 

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது இருநாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும்  போட்டியாக இருக்கும்.  இரு நாடுகளுக்கிடையேயான அரசாங்கத்தின் உறவானது, எதிர்மறை போக்குடன் இருந்து வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான தொடர் போட்டியானது நடைபெறுவதில்லை.  மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் இல்லாத நிலையில், அவர்கள் ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.

இதனால் , இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.  இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் T20 உலகக் கோப்பை 2024 நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி சூடு:

கடந்த ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் ஆட்டம் தொடர்பாக பேட்டி எடுத்த YouTuber க்கு  ஆபத்தானதாக மாறியது.

யூடியூபரான சாத் அகமது என்பது பாகிஸ்தானில் உள்ள மொபைல் சந்தைக்குச் சென்று பல கடைக்காரர்களிடம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தொடர்பான கேள்விகளைக் கேட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்போது, யூடியூபர் சாத் அகமது, அங்கிருந்த ஒரு பாதுகாவலரை அணுகி, ​​ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து கேட்டுள்ளார். இந்த கேள்வியால், அந்த பாதுகாவலர் மிகுந்த எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், விடாமல் தொடர்ந்து கேட்டுள்ளார். 

இதையடுத்து யூடியூபரை, அந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலே உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது, அவர் தெரிவித்ததாவது, தனது முகத்தின் அருகே கேமரா மற்றும் மைக்ரோஃபோன் மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்டதால் எரிச்சலடைந்தேன்.

Also Read: நண்பருடன் குடிக்க சென்ற பாதுகாப்பு படை வீரர்.! போதையில் நடந்த கொடூரம்: காஞ்சியில் அதிர்ச்சி

Also Read: விமான நிலையமா போதை கடத்தல் மையமா ? - சென்னையில் சிக்கிய ரூ.35 கோடி மதிப்புள்ள உயர்ரக போதை பொருள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" கள்ளக்குறிச்சிக்கு சென்ற அண்ணாமலை ஆவேசம்
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? -  சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? - சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" கள்ளக்குறிச்சிக்கு சென்ற அண்ணாமலை ஆவேசம்
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? -  சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? - சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kamal Haasan:
Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - கள்ளச்சாராய விவகாரத்தில் ஓபிஎஸ் போர்க்கோடி
OPS On Illicit Liquor: ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - கள்ளச்சாராய விவகாரத்தில் ஓபிஎஸ் போர்க்கோடி
Embed widget