மேலும் அறிய

மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாட்ஷாவிற்கு அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்த சாதிக் பாட்ஷா போலீசாரை துப்பாக்கியால் காட்டி மிரட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் சாதிக் பாட்ஷா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததைத கண்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூன் மாதம் சென்னை, மயிலாடுதுறை உள்பட சாதிக் பாட்ஷாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றினர். இந்த நிலையில், இந்த சாதிக் பாட்ஷாவிற்கு தீவிரவாத அமைப்பான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கடந்த 21-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டிய 5 பேரில் 4 பேர் சாதிக் பாட்ஷா, ஆஷிக், முகமது இர்பான் மற்றும் ரஹமதுல்லா ஆகியோர் மீது  தேசிய புலனாய்வு முகமை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேர் உள்பட மற்றொரு நபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், சாதிக் பாட்ஷா பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள் சாதிக் பாட்ஷா மீது அவர் நடத்தி வரும் தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்திற்கு வரும் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டும் உள்ளது. 2017ம் ஆண்டு சாதிக் பாட்ஷாவை சென்னை வடக்கு கடற்கரை போலீசார் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் சாதிக்பாட்ஷாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக் பாட்ஷா மீது சென்னை பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : யார் இந்த சாதிக் பாஷா? என்ஐஏ சோதனையின் பின்னணி!

மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget