மேலும் அறிய

மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாட்ஷாவிற்கு அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்த சாதிக் பாட்ஷா போலீசாரை துப்பாக்கியால் காட்டி மிரட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் சாதிக் பாட்ஷா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததைத கண்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூன் மாதம் சென்னை, மயிலாடுதுறை உள்பட சாதிக் பாட்ஷாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றினர். இந்த நிலையில், இந்த சாதிக் பாட்ஷாவிற்கு தீவிரவாத அமைப்பான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

மயிலாடுதுறையில் கடந்த 21-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டிய 5 பேரில் 4 பேர் சாதிக் பாட்ஷா, ஆஷிக், முகமது இர்பான் மற்றும் ரஹமதுல்லா ஆகியோர் மீது  தேசிய புலனாய்வு முகமை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேர் உள்பட மற்றொரு நபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், சாதிக் பாட்ஷா பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.


மயிலாடுதுறை டூ ஐஎஸ்ஐஎஸ்! சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. !

தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள் சாதிக் பாட்ஷா மீது அவர் நடத்தி வரும் தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்திற்கு வரும் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டும் உள்ளது. 2017ம் ஆண்டு சாதிக் பாட்ஷாவை சென்னை வடக்கு கடற்கரை போலீசார் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவுத்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் சாதிக்பாட்ஷாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக் பாட்ஷா மீது சென்னை பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : யார் இந்த சாதிக் பாஷா? என்ஐஏ சோதனையின் பின்னணி!

மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget