மேலும் அறிய

Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!

அதிக கட்டணம் என்றாலும் குறைவான மணி நேர பயணம் என்பதால் பலரும் அதில் செல்கிறார்கள். ஆனால் அதிவேகம் என கூறிவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இந்தியாவின் அதிவேக ரயிலாக அறியப்படும் வந்தே பாரத் ரயில் தனக்கு அதிருப்தி அளித்ததாக அதனை உருவாக்கியவர்களில் ஒருவரான சுதான்ஷூ மணி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வந்தே பாரத் ரயில்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றபோது பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் மிக முக்கியமாக ரயில்வே துறையில் வந்தே பாரத் எனப்படும் அதிவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை எழும்பூர் - நாகர்கோயில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, மதுரை - பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. 

அதிக கட்டணம் என்றாலும் குறைவான மணி நேர பயணம் என்பதால் பலரும் அதில் செல்கிறார்கள். ஆனால் அதிவேகம் என கூறிவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. பல ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதால் தான் விரைவாக செல்கிறது, அதிவேகம் எல்லாம் இல்லை என பலரும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை உருவாக்கியவர்களில் ஒருவரான சுதான்ஷூ மணி அறிமுகமான 7 ஆண்டுகளில் முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

மோசமான ஆக்கிரமிப்பு

லக்னோவின் சர்பாக் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு அவர் பயணப்பட்டார். பின்னர் தனது பயண அனுபவத்தை அவர் பகிர்ந்தார். எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்த அவர் உள்ளே இருந்த சுத்தம் மற்றும் சுகாதாரமான உணவு ஆகியவற்றை பாராட்டினார். அதேசமயம் பெட்டியில் இருந்த சிவப்பு கம்பளம் விரிப்பு, தேவையற்ற ஆக்கிரமிப்பு குறித்து அதிருப்தியடைந்தார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறம் பெரும்பாலும் நாங்கள் கட்டியதைப் போலவே இருந்தது. பக்கவாட்டு சுவரில் கொஞ்சம் அலை அலையாக இருந்திருக்கலாம். ஆனால் மற்ற இந்திய ரயில்களை விட வந்தே பாரத் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மேலும் கோச்சில் போடப்பட்டிருந்த சிவப்பு கம்பள விரிப்பு தேவையற்றதாக இருக்கும் நிலையில் அதில் ஏற்பட்டிருந்த கறை பயணிகளுக்கு வந்தே பாரத் ரயில் மீது உண்டாகும் நம்பிக்கையை மறைப்பது போல் உணர்ந்தேன். அதேசமயம் இருக்கைகள் முன்மாதிரியை விட மிகவும் வசதியாக இருந்தன.

கழிப்பறை சுத்தமாகவும் செயல்பாட்டுடனும் இருந்தது. ஆனால் செலவுக் குறைப்பு என்ற பெயரில் அதில் செய்யப்பட்டுள்ள வசதிகளில் பிறரின் கைரேகைகள் தெளிவாக பதிவாகியிருந்தது. இது எங்களது ரயில் கொள்முதல் முறையின்  நித்திய சாபமாக பார்க்கிறேன். மொத்தத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் சென்ன நன்றாக இருந்தது. இருப்பினும் முன்னே இருந்த மாதிரி இல்லை என்பதை உணரக்கூடிய வகையில் மேம்படுத்தப்படவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
Embed widget