மேலும் அறிய

ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

மும்பையில் பயங்கர ஆயுதங்களுடன் ஆள் நடமாட்டமின்றி வெளிநாட்டு படகு கரை ஒதுங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, மகாராஷ்ட்டிரா தலைநகர் மும்பையில் கோலாகலமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தரைவழியிலும், கடல் வழியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மும்பையின் அருகே அலிபாக்கில் ஸ்ரீவர்தன் கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த கடற்கரையில் நேற்று படகு ஒன்று கரை ஒதுங்கியது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த படகை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் கரை ஒதுங்கிய படகை கரைக்கு கொண்டு வந்தனர்.


ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

பின்னர், மும்பை போலீசார் படகை பரிசோதனை செய்தனர். அப்போது, படகில் ஏகே 47 துப்பாக்கிகள் 3 மற்றும் தோட்டாக்கள் இருந்தன. இதைக்கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கரை ஒதுங்கிய படகு இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது என்று கண்டுபிடித்தனர்.

இந்த படகு ஓமன் நாட்டில் இருந்து ஐரோப்பியா சென்று கொண்டிருந்தபோது கடந்த ஜூன் மாதம் மஸ்கட்டில் பழுதாகியுள்ளது. அப்போது, படகில் இருந்தவர்கள் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். ஆனால், படகை அவர்கள் மீட்கவில்லை. இதையடுத்து, படகும் கடலிலே மாயமானது. மேலும், படகில் இருந்த ஆவணங்கள், துப்பாக்கிகளின் வரிசை எண்கள் இவற்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.


ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!

போலீசார் அந்த துப்பாக்கிகளின் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அந்த துப்பாக்கிகள் தங்களிடம் இருந்து மாயமானவை என்று அதன் விற்பனையாளர்கள் தகவல் அளித்தனர். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விநாயகர் சதுர்த்திக்காக மும்பை மாநகரம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம படகு கரை ஒதுங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ மும்பை அருகே சிக்கியுள்ள படகு ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது ஆகும். அந்த பெண்ணின் கணவர் கப்பல் கேப்டனாக உள்ளார். இது பயங்கரவாத செயலாக தெரியவில்லை. தற்போது, எதையும் உறுதியாக கூற முடியாது. பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், மும்பை போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார். பயங்கர ஆயுதங்களுடன் வெளிநாட்டு படகு ஒதுங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பன்மடங்கு அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பை கடல் மார்க்கம் வழியாக சட்டவிரோத சம்பவங்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget