மேலும் அறிய

வேளாங்கண்ணியில் கனமழை: ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் சாகசப் பிரியர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கனமழை எச்சரிக்கையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமலும் ஆபத்தான முறையில் பலர் கடலில் குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் வார விடுமுறையான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், கனமழை எச்சரிக்கையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி பேராலயம், உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனிதத் தலமாக மட்டுமின்றி, அழகிய கடற்கரையுடன் கூடிய ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. பொதுவாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் வேளாங்கண்ணி களைகட்டும். பேராலயம், கடைகள், கடற்கரை என எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

கனமழை எச்சரிக்கையால் வெறிச்சோடிய பகுதிகள்

தற்பொழுது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதி கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பயணச் சிரமங்களைத் தவிர்க்கவும் வெளி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது.

சாதாரண வார விடுமுறை நாட்களுடன் ஒப்பிடுகையில், பேராலய வளாகம், முக்கிய வீதிகள் மற்றும் கடைவீதிப் பகுதிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் வியாபாரம் இன்றி வெறிச்சோடியது.

ஆபத்தை அறியாமல் கடலில் குளிக்கும் சாகசப் பிரியர்கள்

பேராலயம் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்திருந்தாலும், கடற்கரைப் பகுதியில் ஓரளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. கனமழையால் நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கவும், இயற்கையின் சீற்றத்தைப் பார்க்கவும் பலர் கடற்கரைக்கு வந்துள்ளனர்.

மழை மற்றும் கடல் சீற்றத்தை உணராமல், சிலர் தடையை மீறி கடலில் குதித்துக் குளித்து வருகின்றனர். ஆழமான கடலில் இறங்க வேண்டாம் எனப் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் சிலர் சாகச உணர்வுடன் கடலில் குளிப்பது, அங்கிருந்த பிற சுற்றுலாப் பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மழையில் நனைந்தபடி குழுப் புகைப்படம்

மறுபுறம், மழையால் நிலவும் இதமான மற்றும் குளிர்ந்த சூழலை ரசிக்க வந்த பெரும்பாலான மக்கள், கடற்கரையில் அமர்ந்து கடலின் இயற்கை அழகை ரசித்தனர். குழந்தைகளோடு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த குடும்பத்தினரும் அதிகளவில் காணப்பட்டனர்.

தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தபடி உற்சாகமாகக் குழுப் புகைப்படங்கள் எடுத்தும், 'செல்பி' எடுத்தும் இந்தக் குளிர்ச்சியான அனுபவத்தைப் பதிவு செய்து மகிழ்ந்தனர்.

மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் தேவை

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பேராலயம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர், ஆபத்தை உணராமல் கடலில் குளிப்பவர்களைக் கண்காணித்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க, கடற்கரைப் பகுதியில் கூடுதல் எச்சரிக்கைப் பலகைகளையும், கண்காணிப்புப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனசமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க செஞ்சுட்டாங்க - கைதாகி சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு !
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
திருப்பத்தூரில் அதிர்ச்சி.. அதிமுக பிரமுகர் கொலை முயற்சி! காரை ஏற்றி கொல்ல முயன்றது ஏன்?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
Embed widget