மேலும் அறிய

Madhya Pradesh: பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்ட பிஞ்சுகுழந்தை...! 12 முறை கத்தியால் குத்திக்கொன்ற சைக்கோ கொலையாளி..! மத்திய பிரதேசத்தில் கொடூரம்

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த கொலைகாரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட 7 வயது குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த  சைக்கோ கொலைகாரனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வருகிறது. சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். ஏழு கோடி மக்கள் தொகைக்கு மேல், மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் செய்துள்ள கொலையால் மத்திய பிரதேசமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னர் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பதியினர் அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இதனால், பெற்றோர்களை இழந்த 7 வயது குழந்தை, தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என அடிக்கடி அழுதுள்ளது. குழந்தையின் உறவினர்களும் குழந்தையினை எவ்வளவோ முயற்சி செய்து அவ்வப்போது குழந்தையினை சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இருப்பினும் 7 வயது குழந்தைக்கு தனது பெற்றோர்கள் இறந்தது தெரியாமல், மீண்டும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளது. ஆனால், உறவினர்களும் அந்த ஊர்காரர்களும் பெற்றோர்கள் வெளியூர் சென்று விட்டனர் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து வந்துள்ளனர். ஆனால் அவ்வப்போது தனது உறவினர்களும் ஊர்காரர்களும் சொல்லியதை கேட்டு சமாதானம் அடைந்த குழந்தை, மீண்டும் பெற்றோரை காண அடம் பிடித்துள்ளது. ஆனால், குழந்தையினை சமாதானம் செய்ய முடியாமல் எல்லோரும் விழி பிதுங்கியும், குழந்தையின் பரிதாப நிலையினையும் கண்டு மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். இப்படி இருந்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது அந்த ஊரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்தூர் மாவட்டத்தில் உள்ள அதே ஊரைச் சேர்ந்த, ஒரு நபரிடம் பெற்றோரை இழந்த குழந்தை தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும், அவர்கள் சென்றுள்ள ஊருக்கு தன்னை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுள்ளது. இதனால், உன்னை உனது பெற்றோர்களிடம் அழைத்துச் செல்வதாக கூறி, குழந்தையை வீட்டுக்குள் அழைத்துச் சென்று 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உறவினர்கள் எவ்வளவோ முயன்றும் கதவை கொலைகாரன் திறக்காததால், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலைகாரனை கைது செய்தனர்.

விசாரணை முடிவில், குழந்தை தனது பெற்றோரை காண ஆசைப்பட்டதால் தான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது. மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், குழந்தை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த கொலையால் இந்தூர் மாவட்டமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

பெற்றோரை இழந்த 7 வயது குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரனை அந்த ஊர் மக்கள் சைக்கோ எனவும் கூறி வருகின்றனர்.

Coimbatore : தொடர் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம்...! கோவைக்கு புதிய உளவுப்பிரிவு உதவி ஆணையர் நியமனம்..! தமிழக டி.ஜி.பி. உத்தரவு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget