மேலும் அறிய

Madhya Pradesh: பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்ட பிஞ்சுகுழந்தை...! 12 முறை கத்தியால் குத்திக்கொன்ற சைக்கோ கொலையாளி..! மத்திய பிரதேசத்தில் கொடூரம்

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த கொலைகாரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட 7 வயது குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த  சைக்கோ கொலைகாரனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வருகிறது. சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். ஏழு கோடி மக்கள் தொகைக்கு மேல், மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் செய்துள்ள கொலையால் மத்திய பிரதேசமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னர் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பதியினர் அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இதனால், பெற்றோர்களை இழந்த 7 வயது குழந்தை, தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என அடிக்கடி அழுதுள்ளது. குழந்தையின் உறவினர்களும் குழந்தையினை எவ்வளவோ முயற்சி செய்து அவ்வப்போது குழந்தையினை சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இருப்பினும் 7 வயது குழந்தைக்கு தனது பெற்றோர்கள் இறந்தது தெரியாமல், மீண்டும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளது. ஆனால், உறவினர்களும் அந்த ஊர்காரர்களும் பெற்றோர்கள் வெளியூர் சென்று விட்டனர் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து வந்துள்ளனர். ஆனால் அவ்வப்போது தனது உறவினர்களும் ஊர்காரர்களும் சொல்லியதை கேட்டு சமாதானம் அடைந்த குழந்தை, மீண்டும் பெற்றோரை காண அடம் பிடித்துள்ளது. ஆனால், குழந்தையினை சமாதானம் செய்ய முடியாமல் எல்லோரும் விழி பிதுங்கியும், குழந்தையின் பரிதாப நிலையினையும் கண்டு மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். இப்படி இருந்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது அந்த ஊரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்தூர் மாவட்டத்தில் உள்ள அதே ஊரைச் சேர்ந்த, ஒரு நபரிடம் பெற்றோரை இழந்த குழந்தை தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும், அவர்கள் சென்றுள்ள ஊருக்கு தன்னை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுள்ளது. இதனால், உன்னை உனது பெற்றோர்களிடம் அழைத்துச் செல்வதாக கூறி, குழந்தையை வீட்டுக்குள் அழைத்துச் சென்று 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உறவினர்கள் எவ்வளவோ முயன்றும் கதவை கொலைகாரன் திறக்காததால், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலைகாரனை கைது செய்தனர்.

விசாரணை முடிவில், குழந்தை தனது பெற்றோரை காண ஆசைப்பட்டதால் தான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது. மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், குழந்தை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த கொலையால் இந்தூர் மாவட்டமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

பெற்றோரை இழந்த 7 வயது குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரனை அந்த ஊர் மக்கள் சைக்கோ எனவும் கூறி வருகின்றனர்.

Coimbatore : தொடர் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம்...! கோவைக்கு புதிய உளவுப்பிரிவு உதவி ஆணையர் நியமனம்..! தமிழக டி.ஜி.பி. உத்தரவு

 

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget