மேலும் அறிய

Madhya Pradesh: பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்ட பிஞ்சுகுழந்தை...! 12 முறை கத்தியால் குத்திக்கொன்ற சைக்கோ கொலையாளி..! மத்திய பிரதேசத்தில் கொடூரம்

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த கொலைகாரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட 7 வயது குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த  சைக்கோ கொலைகாரனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வருகிறது. சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். ஏழு கோடி மக்கள் தொகைக்கு மேல், மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் செய்துள்ள கொலையால் மத்திய பிரதேசமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. 

சில வருடங்களுக்கு முன்னர் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பதியினர் அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இதனால், பெற்றோர்களை இழந்த 7 வயது குழந்தை, தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என அடிக்கடி அழுதுள்ளது. குழந்தையின் உறவினர்களும் குழந்தையினை எவ்வளவோ முயற்சி செய்து அவ்வப்போது குழந்தையினை சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இருப்பினும் 7 வயது குழந்தைக்கு தனது பெற்றோர்கள் இறந்தது தெரியாமல், மீண்டும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளது. ஆனால், உறவினர்களும் அந்த ஊர்காரர்களும் பெற்றோர்கள் வெளியூர் சென்று விட்டனர் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து வந்துள்ளனர். ஆனால் அவ்வப்போது தனது உறவினர்களும் ஊர்காரர்களும் சொல்லியதை கேட்டு சமாதானம் அடைந்த குழந்தை, மீண்டும் பெற்றோரை காண அடம் பிடித்துள்ளது. ஆனால், குழந்தையினை சமாதானம் செய்ய முடியாமல் எல்லோரும் விழி பிதுங்கியும், குழந்தையின் பரிதாப நிலையினையும் கண்டு மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். இப்படி இருந்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது அந்த ஊரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்தூர் மாவட்டத்தில் உள்ள அதே ஊரைச் சேர்ந்த, ஒரு நபரிடம் பெற்றோரை இழந்த குழந்தை தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும், அவர்கள் சென்றுள்ள ஊருக்கு தன்னை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுள்ளது. இதனால், உன்னை உனது பெற்றோர்களிடம் அழைத்துச் செல்வதாக கூறி, குழந்தையை வீட்டுக்குள் அழைத்துச் சென்று 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உறவினர்கள் எவ்வளவோ முயன்றும் கதவை கொலைகாரன் திறக்காததால், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலைகாரனை கைது செய்தனர்.

விசாரணை முடிவில், குழந்தை தனது பெற்றோரை காண ஆசைப்பட்டதால் தான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது. மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், குழந்தை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த கொலையால் இந்தூர் மாவட்டமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

பெற்றோரை இழந்த 7 வயது குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரனை அந்த ஊர் மக்கள் சைக்கோ எனவும் கூறி வருகின்றனர்.

Coimbatore : தொடர் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம்...! கோவைக்கு புதிய உளவுப்பிரிவு உதவி ஆணையர் நியமனம்..! தமிழக டி.ஜி.பி. உத்தரவு

 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget