மேலும் அறிய

தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

மைனர் சிறுவன் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக்கோரி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் கரீம் நகரில் மைனர் சிறுவன் ஓட்டிவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சொந்த வீடு மற்றும் நிலம் இன்றி சாலையோரத்தில் தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு வேளை சாப்பிட்டிற்காகக் கிடைத்த வேலையை செய்து வரும் இவர்கள் இரவு நேரத்தில் மட்டும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில் வந்து தங்குவார்கள். இதேப்போன்று தான் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில், கமான் சந்திப்பு அருகே பல தொழிலாளர்கள் சாலையோரம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

 கட்டுமானம், சிறு வியாபாரம் போன்ற பல்வேறு கூலித்தொழில் மேற்கொள்ளும் இவர்கள் காலை முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பணிகளுக்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் சாலையோர குடிசைப்பகுதிக்குத் தங்க வருவார்கள். வழக்கம் போல் தங்களது பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் தூங்கிய இவர்கள் மீது, அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சாலையோரத்தில் அமரந்திருந்த 4 பேர் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  • தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

இதனையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த போலீசார், விபத்துக்குக் காரணமானவர்கள் யார்? என விசாரணை நடத்த ஆரம்பித்தனர். அதில் நேற்று காலை 5.30 மணியளவில் கரீம்நகர் பகுதி வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசைப்பகுதிக்குள் மோதியது எனவும், இதனை 18 வயதிற்குக் குறைவான சிறுவன் குடி போதையில் கார் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரியவந்ததும், தன்னுடைய மகனைத் தப்பிக்க வைப்பதற்காக, சிறுவனின் தந்தை தான் கார் ஓட்டியதாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார். ஆனால் இதில் உண்மை இல்லை என்பதை அறிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மகனைக்காப்பாற்றுவதற்காக பொய் சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து  கார் விபத்திற்குக் காரணமாக சிறுவன் உட்பட 4 பேர் மீது 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக்கோரி ஏழை குடும்பங்களைச்சேர்ந்த உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் உயிரிழந்தவர்கள் சுனிதா, லலிதா மற்றும் ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இறந்த ஒருவரின் உடலை மட்டும் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்? இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
Embed widget