மேலும் அறிய

தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

மைனர் சிறுவன் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக்கோரி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் கரீம் நகரில் மைனர் சிறுவன் ஓட்டிவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சொந்த வீடு மற்றும் நிலம் இன்றி சாலையோரத்தில் தற்காலிக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு வேளை சாப்பிட்டிற்காகக் கிடைத்த வேலையை செய்து வரும் இவர்கள் இரவு நேரத்தில் மட்டும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில் வந்து தங்குவார்கள். இதேப்போன்று தான் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில், கமான் சந்திப்பு அருகே பல தொழிலாளர்கள் சாலையோரம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

 கட்டுமானம், சிறு வியாபாரம் போன்ற பல்வேறு கூலித்தொழில் மேற்கொள்ளும் இவர்கள் காலை முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பணிகளுக்குச் சென்று விட்டு இரவு நேரத்தில் சாலையோர குடிசைப்பகுதிக்குத் தங்க வருவார்கள். வழக்கம் போல் தங்களது பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் தூங்கிய இவர்கள் மீது, அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சாலையோரத்தில் அமரந்திருந்த 4 பேர் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  • தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

இதனையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த போலீசார், விபத்துக்குக் காரணமானவர்கள் யார்? என விசாரணை நடத்த ஆரம்பித்தனர். அதில் நேற்று காலை 5.30 மணியளவில் கரீம்நகர் பகுதி வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசைப்பகுதிக்குள் மோதியது எனவும், இதனை 18 வயதிற்குக் குறைவான சிறுவன் குடி போதையில் கார் ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரியவந்ததும், தன்னுடைய மகனைத் தப்பிக்க வைப்பதற்காக, சிறுவனின் தந்தை தான் கார் ஓட்டியதாக போலீசாரிடம் சரணடைந்துள்ளார். ஆனால் இதில் உண்மை இல்லை என்பதை அறிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மகனைக்காப்பாற்றுவதற்காக பொய் சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து  கார் விபத்திற்குக் காரணமாக சிறுவன் உட்பட 4 பேர் மீது 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • தெலங்கானா: குடிபோதையில் காரை குடிசைக்குள் விட்ட சிறுவன்! 4 பேர் உயிரிழப்பு

முன்னதாக, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக்கோரி ஏழை குடும்பங்களைச்சேர்ந்த உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் உயிரிழந்தவர்கள் சுனிதா, லலிதா மற்றும் ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இறந்த ஒருவரின் உடலை மட்டும் அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget