சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமா பாணியில் கைது செய்யப்பட்ட பாம் சரவணண். திருவள்ளூர் நடந்த பரபரப்பு சம்பவம்.

கொலை வழக்கில் கைதாகி உள்ள பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனைவி மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தபோது காரில் ஏற்றி சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தமது மனைவி மகாலட்சுமி மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். ஐசிஎம்ஆர் அருகே வந்த போது காரை மடக்கி காரில் இருந்து இறக்கி போலீசாரின் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
அப்போது பாம் சரவணனுடன் வந்த அவரது மனைவி மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்தவர்கள் யார்? என தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என தெரியாமல் அவசர எண் 100-க்கு பாம் சரவணனின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டு காரில் அழைத்து சென்ற போது அவரது காரை துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், பிரபல ரவுடி பாம் சரவணனின் சகோதரர் தென்னரசு என்பவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயசீலன் என்பவரை 2016-ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியான பாம் சரவணன் திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தபோது சென்னை போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் தெரிய வந்தது.
சினிமாவை போல் பிரபல ரவுடி பாம் சரவணன் திருவள்ளூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்





















