மேலும் அறிய

சென்னையில் தாலிக்கயிற்றால் மனைவிகளின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்கள்- ஒரு மாதிரி இரு சம்பவங்கள்!

Husband Killed Wife: சென்னையின் இரு வேறு பகுதிகளில் மனைவிகளை தாலிக்கயிற்றால் கழுத்தை நெரித்து கணவன்மார்களே கொலை செய்த சம்பவத்தால் அந்தந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து உள்ளது மீஞ்சூர். மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ளது செல்லியம்மன் கோவில் பகுதி. இந்தபகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது கழுத்து தாலிக்கயிற்றால் நெரிக்கப்பட்டு, அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இளம்பெண்ணின் சடலத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.


சென்னையில் தாலிக்கயிற்றால் மனைவிகளின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்கள்- ஒரு மாதிரி இரு சம்பவங்கள்!

பின்னர், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களது விசாரணையில், உயிரிழந்த பெண் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மீனா என்று தெரிய வந்துள்ளது. 20 வயதே ஆன மீனா அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கட்டிட பணியின்போது முத்தரசன் என்பவரை காதலித்து வந்த மீனா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முத்தரசனை திருமணம் செய்து கொண்டார்.   

மேலும் படிக்க : நீதிமன்ற வளாகத்தில் காவலாளி தற்கொலை: காரணத்தை சொன்ன உருக்கமான கடிதம்!

இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்தரசனும், மீனாவும் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால், இரவு நீண்டநேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. மீனாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணைக்காக முத்தரசனைத் தேடிச்சென்றபோது அவரும் வீட்டிற்கு திரும்பாததை கண்டறிந்துள்ளனர்.


சென்னையில் தாலிக்கயிற்றால் மனைவிகளின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்கள்- ஒரு மாதிரி இரு சம்பவங்கள்!

இதனால், மனைவி மீனாவை காதல் கணவன் முத்தரசனே தாலிக்கயிற்றால் கழுத்த நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள 25 வயதே ஆன முத்தரசனை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருமணமான ஒரே வருடத்தில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே சம்பவத்தை போல, பூந்தமல்லியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பூந்தமல்லி கிழக்கு மாடவீதி பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வயது 30. இவரது மனைவி பெயர் நந்தினி. அவருக்கு வயது 27. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இருவர் ஆண் குழந்தைகள். ஒருவர் பெண் குழந்தை ஆவர். இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து நந்தினி வெளியே வரவில்லை. வீடும் பூட்டியே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த நந்தினி வீட்டுக்கு கீழ் குடியிருந்த நந்தினியின் சகோதரி பவித்ரா பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார்.


சென்னையில் தாலிக்கயிற்றால் மனைவிகளின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்கள்- ஒரு மாதிரி இரு சம்பவங்கள்!

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நந்தினி தாலியால் கழுத்து இறுக்கப்பட்டு, கட்டையால் பலமாக தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் நந்தினியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளுடன் தலைமறைவான ஆனந்தராஜையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க : குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் குற்றங்கள் 400 சதவிகிதம் அதிகரிப்பு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget