மேலும் அறிய

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!

சீர்காழி அருகே நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பனை நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவரை அவரது உறவினரே நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். தற்போது கோடை காலம் என்பதால், இருவரும் இணைந்து பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டி எடுத்து வந்து, சூரக்காடு பகுதியில் சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து வந்தனர்.

உறவினர்கள் என்பதால் இருவரும் ஒருமித்த கருத்துடன் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை செய்த பணத்தை வைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விற்பனைக்கான தொகையை மருதுபாண்டியன் தன்னிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கார்த்திக் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நள்ளிரவு நடந்த கோர சம்பவம்

இந்நிலையில், நேற்று இரவு கார்த்திக் வழக்கம் போல மருதுபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, மருதுபாண்டியன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். கார்த்திக் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்துடன் கார்த்திக் ஆவேசமாக எழுந்துள்ளார். வீட்டின் தகரக் கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்ற கார்த்திக், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருதுபாண்டியனிடம், "மூன்று நாட்களாகப் பனங்காய் விற்ற பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மருதுபாண்டியன் சுதாரிப்பதற்குள், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருதுபாண்டியனின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மருதுபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி, ரத்தக் கறையுடன் நின்றிருந்த கார்த்திக்கைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டார்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக சீர்காழி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, அதே பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த கார்த்திக்கைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பக் கட்ட விசாரணையில், நுங்கு விற்பனை செய்த பணத்தை மருதுபாண்டியன் தராமல் ஏமாற்றியதால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

கிராமத்தில் நிலவும் பதற்றம்

நெருங்கிய உறவினர்களாக இருந்து, ஒன்றாகத் தொழில் செய்து வந்த இருவருக்குள் பணத்திற்காக நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் காரைமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மருதுபாண்டியனுக்குத் திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். ஒரு சிறிய பணத்தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்துள்ள சீர்காழி போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாகச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
Embed widget