மேலும் அறிய

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!

சீர்காழி அருகே நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பனை நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவரை அவரது உறவினரே நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். தற்போது கோடை காலம் என்பதால், இருவரும் இணைந்து பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டி எடுத்து வந்து, சூரக்காடு பகுதியில் சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து வந்தனர்.

உறவினர்கள் என்பதால் இருவரும் ஒருமித்த கருத்துடன் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை செய்த பணத்தை வைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விற்பனைக்கான தொகையை மருதுபாண்டியன் தன்னிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கார்த்திக் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நள்ளிரவு நடந்த கோர சம்பவம்

இந்நிலையில், நேற்று இரவு கார்த்திக் வழக்கம் போல மருதுபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, மருதுபாண்டியன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். கார்த்திக் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்துடன் கார்த்திக் ஆவேசமாக எழுந்துள்ளார். வீட்டின் தகரக் கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்ற கார்த்திக், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருதுபாண்டியனிடம், "மூன்று நாட்களாகப் பனங்காய் விற்ற பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மருதுபாண்டியன் சுதாரிப்பதற்குள், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருதுபாண்டியனின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மருதுபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி, ரத்தக் கறையுடன் நின்றிருந்த கார்த்திக்கைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டார்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக சீர்காழி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, அதே பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த கார்த்திக்கைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பக் கட்ட விசாரணையில், நுங்கு விற்பனை செய்த பணத்தை மருதுபாண்டியன் தராமல் ஏமாற்றியதால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

கிராமத்தில் நிலவும் பதற்றம்

நெருங்கிய உறவினர்களாக இருந்து, ஒன்றாகத் தொழில் செய்து வந்த இருவருக்குள் பணத்திற்காக நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் காரைமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மருதுபாண்டியனுக்குத் திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். ஒரு சிறிய பணத்தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்துள்ள சீர்காழி போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாகச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு
அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதுக்கோட்டை முதலிடம்! வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Srinath: நடிகர் ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பதவியா? விஜய்யின் உயிர் நண்பனுக்கு ஜாக்பாட்!
Actor Srinath: நடிகர் ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பதவியா? விஜய்யின் உயிர் நண்பனுக்கு ஜாக்பாட்!
நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா - முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அந்த 'புதிய முகங்கள்' யார்?
நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா - முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அந்த 'புதிய முகங்கள்' யார்?
Congress Ministers: 59 ஆண்டுகளுக்கு பிறகு! விஜய் ஆட்சியில் அமைச்சராகும் கதர்சட்டைMLA-க்கள் - யார்? யார்? என்ன பதவி?
Congress Ministers: 59 ஆண்டுகளுக்கு பிறகு! விஜய் ஆட்சியில் அமைச்சராகும் கதர்சட்டைMLA-க்கள் - யார்? யார்? என்ன பதவி?
Royapuram MLA: காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து தகராறு செய்தாரா தவெக எம்எல்ஏ? உண்மையில் நடந்தது என்ன?
Royapuram MLA: காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து தகராறு செய்தாரா தவெக எம்எல்ஏ? உண்மையில் நடந்தது என்ன?
IPS Transfer: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு புதிய ஐஜி! 15 ஐபிஎஸ் அதிகாரிகளை அடியோடு மாற்றிய முதலமைச்சர்!
IPS Transfer: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு புதிய ஐஜி! 15 ஐபிஎஸ் அதிகாரிகளை அடியோடு மாற்றிய முதலமைச்சர்!
அல்வா கொடுத்த விஜய்! இபிஎஸ் பக்கம் தாவ தயாரான சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள்! அதிமுக-வில் இனி ட்விஸ்ட்தான்!
அல்வா கொடுத்த விஜய்! இபிஎஸ் பக்கம் தாவ தயாரான சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள்! அதிமுக-வில் இனி ட்விஸ்ட்தான்!
Rahul Slams Modi: “'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
“'இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்
Modi Meloni Melody: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி‘ சாக்லெட் கொடுத்த மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
Embed widget