மேலும் அறிய

அதிக வாகனங்களை விற்பனை செய்ய டார்கெட் - அவசர கதியில் விற்பனை செய்த பைக்கால் வில்லங்கத்தில் சிக்கிய விற்பனை பிரதிநிதி

மயிலாடுதுறையில் ஆவணங்களை சரிபார்க்காமல் தவணை முறையில் விற்ற பைக்கை திரும்ப கேட்டு, பெண் ஒருவரை தாக்கிய இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரிபார்க்காமல் முன்பணம் பெற்று தவணை முறையில் அவசர அவசரமாக விற்ற இருசக்கர வாகனத்தை திரும்ப கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இருசக்கர வாகன விற்பனை பிரிவு நிர்வாகி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவணை முறையில் புதிய பைக் வாங்கிய பெண்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி 27 வயதான நிவேதா. இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 11 -ஆம் தேதி மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் உள்ள தாசரதி டிவிஎஸ் நிறுவனத்தில் தனது கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை (ஸ்கூட்டி) தனியார் வங்கியில் 24 மாதம் தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில், ரூபாய் 6 ஆயிரத்து 900 முன்பணம் கட்டி வாகனத்தை வாங்கியுள்ளார். 

AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்


அதிக வாகனங்களை விற்பனை செய்ய டார்கெட் - அவசர கதியில் விற்பனை செய்த பைக்கால் வில்லங்கத்தில் சிக்கிய விற்பனை பிரதிநிதி

ஆவணங்கள் சரிபார்ப்பில் குளறுபடி

இந்த சூழலில் ஏற்கனவே குமார் தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கி, முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த விபரம் தெரிய வந்ததால் புதிதாக வாங்கிய வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முருகமங்கலத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். ஆனால் நிவேதா வாகனத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. 

WhatsApp New Features: இனி ஆடியோவுடன் ஸ்க்ரீன்ஷேரிங்; வாட்ஸ் அப் வழங்கியுள்ள புதிய அப்டேட்கள் இதோ!


அதிக வாகனங்களை விற்பனை செய்ய டார்கெட் - அவசர கதியில் விற்பனை செய்த பைக்கால் வில்லங்கத்தில் சிக்கிய விற்பனை பிரதிநிதி

தாக்கப்பட்ட பெண்

இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த ஆனதாண்டவபுரம் அருகே நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி சௌந்தர்ராஜன் வழிமறித்து தாக்கி, நிவேதாவின் ஆடையை பிடித்து இழுத்தாகவும், அதில் உடை கிழிந்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான நிவேதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?


அதிக வாகனங்களை விற்பனை செய்ய டார்கெட் - அவசர கதியில் விற்பனை செய்த பைக்கால் வில்லங்கத்தில் சிக்கிய விற்பனை பிரதிநிதி

வாகன பிரதிநிதி மீது வழக்கு பதிவு 

புகாரை அடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதிக வாகனங்களை விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களை சரியான முறையில் சரிபார்க்காமல் வாகனத்தை கொடுத்துவிட்டு, தற்போது தகறாரில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சௌந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Richest Lok Sabha Members: 18-வது மக்களவை - டாப் 10 பணக்கார எம்.பிக்கள் பட்டியல் இதோ - முதலிடம் யாருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Chennai Rains: சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Chennai Rains: சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
Embed widget