மேலும் அறிய

மாயமான பள்ளி சிறுமி: காவல்துறை மெத்தனத்தால் பெற்றோர் தர்ணா! ஆட்சியரின் அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை அருகே காணாமல் போன பள்ளிச் சிறுமி கண்டுபிடிக்க காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தர்ணா போராட்டத்தால் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: பள்ளிக்குச் சென்ற தங்களது 15 வயது மகளைக் காணவில்லை என குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிறுமியின் பெற்றோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக, உடனடியாகச் சிறுமியை மீட்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மாயமானது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாஸ்கர் - மகாலட்சுமி தம்பதியினரின் 15 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், மறுநாள் நவம்பர் 4-ஆம் தேதி குத்தாலம் காவல் நிலையத்தில் தங்கள் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு வாரமாகியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

கடத்திச் சென்றவர் யார்?

இதற்கிடையில், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வக்காரமாரியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மகேஷ் தங்களது மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக பெற்றோருக்குத் நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது. தங்கள் மகளைக் கடத்திச் சென்ற நபர் குறித்த இந்தத் தகவலை அவர்கள் உடனடியாகக் குத்தாலம் காவல் நிலையத்திற்கும், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கும் நேரில் சென்று தெரிவித்தனர்.

ஆனால், கடத்தியவர் குறித்த தகவல் தெரிந்த பின்னரும், காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும், சிறுமி குறித்து எந்தவொரு முன்னேற்றமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

காவல்துறையின் அலட்சியம் மற்றும் ஒரு வாரமாக நீடித்த மௌனம் காரணமாக விரக்தியடைந்த பெற்றோர் சுந்தரபாஸ்கர் மற்றும் மகாலட்சுமி, இன்று (நவம்பர் 10) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தங்கள் மகள் குறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்கக் கோரி, கோரிக்கை விளக்கப் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் போராட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் குறித்துத் தகவலறிந்த ஆட்சியரக அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட சமரசத்திற்குப் பின்னர், அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை

ஆட்சியரக அதிகாரிகளின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட பெற்றோர், போராட்டத்தைக் கைவிட்டு, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் தங்களது மகளைக் கடத்தியவர் குறித்த விவரங்களையும், காவல்துறையின் மெத்தனப் போக்கையும் விளக்கி ஒரு மனுவை அளித்தனர்.

பெற்றோரின் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவர்கள் தெரிவித்த தகவல்களைக் கேட்டறிந்து, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். உடனடியாக அவர் காவல் துறை உயரதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சிறுமி மாயமான விவகாரத்தில் ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாகச் சிறுமியை மீட்கவும், கடத்தலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி உத்தரவு, தங்களுக்குச் சிறுமியை மீட்கும் நம்பிக்கை அளிப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டைத் தொடர்ந்து, காவல்துறையினர் இனி தீவிர நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Ration card: ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
ஒரே நாளில் ரேஷன் கார்டு.... பொதுமக்களே மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
Seltos vs Sierra Vs Victoris: சியாரா, விக்டோரிஸ் உடன் மோதும் செல்டோஸ் - அம்சங்கள், வசதிகள் அப்பாடக்கர் யார்?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
Embed widget