மேலும் அறிய

சீர்காழி பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது - இருவர் நீதிமன்றத்தில் சரண்

சீர்காழியில் கடந்த 25 -ம் தேதி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் 27 வயதான தினேஷ் என்கிற ரெட் தினேஷ். இவர் மீது பல்வேறு  குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 25 ஆம் தேதி கோவில்பத்து பகுதியில் காரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் தினேஷை அரிவாளால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். 


சீர்காழி பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது - இருவர் நீதிமன்றத்தில் சரண்

இதில் படுகாயம் அடைந்த தினேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்து விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷ் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Selvaraghavan: மீண்டும் விவாகரத்தா? - ட்வீட் போட்ட செல்வராகவன்.. கடுமையாக விமர்சித்த இணையவாசிகள்..!


சீர்காழி பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது - இருவர் நீதிமன்றத்தில் சரண்

இந்நிலையில் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்டு தனிப்படைகள் அமைத்து ரெட் தினேஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில்பத்து, நீடுர் கிராமத்தில் வைத்து கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். கோவில்பத்து கீழ அகனியை சேர்ந்த 27 வயதான அரவிந்தன், மணல்மேடு மேல மருதாந்தநல்லூர் சேர்ந்த 39 வயதான சார்லஸ் (எ) சரண்ராஜ்,  மயிலாடுதுறை கழுகாணிமுட்டத்தை சேர்ந்த 39 வயதான சிலம்பரசன் மயிலாடுதுறை கூரைநாடு பகுதியைச் சேர்ந்த 25 வயதான மணிகண்டன், மயிலாடுதுறை சின்னமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 20 வயதான முகேஷ் ஆகிய ஐந்து பேரையும் தனிப்படை காவலர்கள் கைது செய்து சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவக் கலந்தாய்வு; முதல் நாளில் 179 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை


சீர்காழி பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது - இருவர் நீதிமன்றத்தில் சரண்

தொடர்ந்து நீதிபதி ரெங்கேஸ்வரி ஐந்து பேருக்கும் 15 நாள் நாகை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து 5 பேரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பாரதி, கீர்த்திகரன் ஆகிய இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவான முத்துப்பாண்டி என்பவரை  காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். காவல் துறையினர் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் இக்கொலை சம்பவம் முன்விரோதம் காரமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Covid19: துபாயில் இருந்து தமிழ்நாடு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
Shibu Soren: மூன்று முறை முதலமைச்சராகி, 308 நாட்கள் பதவி வகித்த ஷிபு சோரன் காலமானார் - என்ன காரணம்?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
வரலாற்றில் முதல்முறை; 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடம் அறிமுகம்- எதற்கு தெரியுமா?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
O Panneerselvam: ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக - பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?
Mahindra Upcoming Cars: 2 புதிய மின்சார எஸ்யுவிக்கள், 2 பெரிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள் - மஹிந்திரா ஸ்கெட்ச்
Mahindra Upcoming Cars: 2 புதிய மின்சார எஸ்யுவிக்கள், 2 பெரிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்கள் - மஹிந்திரா ஸ்கெட்ச்
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
கேரளாவில் கனமழை எச்சரிக்கை: அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! பாதுகாப்பாக இருங்கள்!
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?
Embed widget