மேலும் அறிய

AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவக் கலந்தாய்வு; முதல் நாளில் 179 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 89 பேர் உட்பட 179 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணையை பெற்றனர்.

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 89 பேர் உட்பட 179 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணையை பெற்றனர். சேர்க்கை கடிதத்தை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் வழங்கினார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் ஆயுஷ் படிப்புகளைக் கற்பித்து வருகின்றன. 

ஆயுஷ் படிப்புகள்

நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் (ஆயுஷ் - சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, நீட் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான ஆயுஷ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று (டிசம்பர் 27) தொடங்கியது. 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடந்தது. 

அரசு ஒதுக்கீடு

1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுப் பிரிவினருக்கும் (580 முதல் 453 நீட் மதிப்பெண்கள் வரை பெற்ற முதல் 203 விண்ணப்பதாரர்களுக்கு) பிற்பகல் 3.30 மணி முதல் நீட் மதிப்பெண்கள் 452 முதல் 426 வரை பெற்ற 203 முதல் 303 பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. 

இன்றும் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு 2023ஆம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் 89 பேர் இடஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றனர். சேர்க்கை கடிதத்தை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ் வழங்கினார். 

கலந்தாய்வு விவரங்களை முழுமையாக அறிய: https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22123919.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?
Embed widget