மேலும் அறிய

Crime: கொடூரம்! சட்டக்கல்லூரி வளாகத்திலே மாணவர் படுகொலை - முன் விரோதத்தால் வெறிச்செயல்

Crime: பாட்னாவில் உள்ள சட்டக்கல்லூரி கல்லூரி வளாகத்தில் 22 வயது மாணவர் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

பாட்னாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மாணவர் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கடந்தாண்டு டாண்டியா இரவில் நடந்த தகராறுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

சட்டக்கல்லூரி மாணவர் கொலை:

பாட்னாவில் உள்ள பிஎன் கல்லூரியில் தொழிற்கல்வி ஆங்கிலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹர்ஷ் ராஜ், நேற்று அதாவது மே 27ம் தேதி சுல்தாங்கஞ்ச் சட்டக் கல்லூரியில் தேர்வெழுத வந்தபோது, ​​முகமூடி அணிந்த  10 முதல் 15 நபர்கள் அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.  இதனால் பலத்த காயம் ஏற்பட்டு கடும் ரத்தகசிவு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், “சட்டக்கல்லூரி வளாகத்தில் சில சமூகவிரோதிகள் மாணவர் ஹர்ஷ் ராஜ் என்பவரை மிக மோசமாக தாக்கினர். இதன் காரணமாக ஹர்ஷ் ராஜ் இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம். இதன்மூலம், இந்த கொலையை  திட்டமிட்ட முக்கிய குற்றவாளியான சந்தன் யாதவை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை பிடிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  கடந்த ஆண்டு தசரா விழாவின் போது நடந்த டாண்டியா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

சி.சி.டி.வி. காட்சி ரிலீஸ்:

மேலும், கல்லூரி வளாகத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி., காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோவில் முகமூடி அணிந்த குற்றவாளிகள்  கொலை செய்யப்பட்ட ஹர்ஷ் ராஜை பலமுறை தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களில் தாக்கியது பதிவாகியுள்ளது. காவல் துறையினர்  குற்றவாளிகளை அடையாளம் காண வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியினர் காவல்துறை விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துயரமான நேரத்தில் கொல்லப்பட்ட மாணவர் ஹர்ஷ் ராஜின் குடும்பத்துடன் அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

சட்டம், ஒழுங்கு:

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கல்வி நிர்வாகத்தின் மீது ஆளும் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்" எனக்  கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget