மேலும் அறிய

அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை

குஜராத்தில் செய்யாத குற்றத்திற்காக 30 வருட ஜெயில் தண்டனையை அனுபவித்தார், விடுதலையான மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் 20 ரூபாய் வழக்கில் செய்யாத குற்றத்திற்காக ஒருவர் 30 வருடம் ஜெயிலில் இருந்தது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

30 வருட ஜெயில் தண்டனைக்குப் பிறகு மரணம்

ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தின் உண்மை சம்பவமாக குஜராத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆனால், அந்த நபர் இன்னும் சிறிது காலம் மகிழ்ச்சியுடன் இருந்து இருந்தால், அவருக்கு இது ஒரு நல்ல முடிவாக இருந்து இருக்கும். குஜராத்தில் ஒருவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதற்காக 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி குஜராத் நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்தபோது, ”என் வாழ்க்கையில் என் மீதிருந்த களங்கம் நீக்கப்பட்டுவிட்டது. கடவுள் என்னை இப்போது அழைத்துச் சென்றாலும், எனக்கு எந்த துக்கமும் இருக்காது," என்று அவர் மகிழ்ச்சிபட பேசியது குறிப்பிடத்தக்கது.

வழக்கில் குற்றச்சாட்டு என்ன? 

 காவல்துறையில் காவலராய் பணியாற்றி வந்த பாபுபாய் பிரஜாபதி அகமதாபாத்தில் பணியமர்த்தப்பட்டபோது, ​​அவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 1997 ஆம் ஆண்டு  அமர்வு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் 2002 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டன. சாட்சி விசாரணைகள் 2003 இல் தொடங்கின, 2004 ஆம் ஆண்டு, அமர்வு நீதிமன்றம் பிரஜாபதிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தது.

விடுதலையான மறுநாளே மரணம்

குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரஜாபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை, அவரது மேல்முறையீடு 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது -  சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. பிரஜாபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் காந்தி, முழு வழக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 தீர்ப்புக்குப் பிறகு, பிரஜாபதி தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மகிழ்ச்சியில் திளைத்து, இப்போதே மரணித்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான் என பேசியுள்ளார். எதிர்பாராத விதமாக, விடுதலையாகி வீடு திரும்பிய மறுநாளே அந்த வார்த்தைகள் பலித்து, மறுநாளே பிரஜாபதி உயிரிழந்துள்ளார்.

பொய்யால் வாழ்க்கையை இழந்த காவலர்

செய்யாத குற்றத்திற்காக சிறையிலெயே தனது வாழ்வின் பெரும் பகுதியை இழந்தவர்,  இனியாவது சிறிது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் வேதனை தெரிவித்தனர். இந்திய குற்றவியல் சட்டம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு பிரஜாபதி வழக்கு உதாரணம் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மரணம் தொடர்பாக பேசிய அவரது வழக்கறிஞர்,  "நான் அவரிடம் ஐயா, நீங்கள் அரசாங்கத்திலிருந்து பெற வேண்டிய அனைத்து சலுகைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்” என்று சொன்னேன். மறுநாள் அவரை மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது," என்று வழக்கறிஞர் வேதனை தெரிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget