மேலும் அறிய

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்.. குற்ற உணர்ச்சியால் தற்கொலை

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரும் திட்டித் தீர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரும் திட்டித் தீர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ரெட்டேரியைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு 27 வயதாகிறது. இவருக்கும் எல்லம்மாள் என்ற மனைவி இருக்கிறார். மனைவி எல்லம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக, எல்லம்மாளுக்கும், பாபுவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் பாபு மனைவி எல்லம்மாளின் மனைவி வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

இதில் எல்லம்மாள் வலியில் துடிதுடித்து உருண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து  வீட்டார் ஓடிவந்து அந்தப் பெண்ணை மீட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு பாபுவை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவருமே வசை பாடியுள்ளனர். தன் தவற்றை உணர்ந்த பாபு, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். கூடவே, குற்ற உணர்ச்சி மேலோங்க தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தீர்வு அல்ல:

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. அது பிரச்சினையில் தப்பிக்க முயலும் குறுக்குவழி. ஆனால் அந்த வழி எந்தத் தீர்வுக்கும் இட்டுச் செல்லாது மாறாக தற்கொலை செய்தோரைச் சார்ந்தோரை நீங்காத் துயரில் ஆழ்த்தும்.
இதனால் தற்கொலை எண்ணம் மேலோங்கும் போது உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவர்களிடம் பேசுங்கள். இல்லாவிட்டால் 104 என்ற அரசாங்கத்தின் இலவச ஆலோசனை எண்ணைத் தொடர்பு கொண்டு பேசலாம். தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுத்து நிறுத்த பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் இயங்கும், ஸ்னேஹா தற்கொலை தடுப்பு உதவி மையத்தை (044-2464 0050) கூட நீங்கள் நாடலாம். இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை. 

சமூகத்துக்கு பொறுப்பு இருக்கிறது:

இங்கே நடைபெறும் பல்வேறு தற்கொலைகளுக்கும் சமூக அழுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம் பெண்கள் தற்கொலை, சமூகம் தன்னைப் பற்றி என்ன பேசுமோ என்பதனாலேயே நடக்கிறது. அதேபோல் மாணவர்களின் தற்கொலை பெற்றோர், சமூகம் தரும் அழுத்தத்தாலேயே நடக்கின்றன. இங்கே பாபுவின் தற்கொலையும் அப்படியொரு அழுத்தத்தில் தான் நடந்துள்ளது.

பாபுவை குற்றவாளி போல் அனைவருமே குத்திக்காட்டிப் பேசவே அவர் தற்கொலை வரை சென்றுள்ளார். அவர் செய்தது தவறு. அந்தத் தவறை சுட்டிக் காட்டி, அவரை உணர வைத்து, முடிந்தால் காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுத்து நல்வழிப் படுத்தியிருக்கலாம். அதைவிடுத்து அவரை குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தது தான் அவரது தற்கொலைக்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget