மேலும் அறிய

Crime: சேலத்தை அதிரவைத்த கொள்ளை சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது.. நகைகள், இருசக்கர வாகனம் மீட்பு

கொள்ளையர் கார்த்தி மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மற்றும் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள பில்லுக்குறிச்சி கிராமம் ஆசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சிவகாமி தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று கோவிந்தராஜன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில், கோவிந்தராஜ் தனது மனைவி சிவகாமியுடன் மேச்சேரி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். மாலை வீடு திரும்பிய கோவிந்தராஜ் வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன்,  வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பூலாம்பட்டி காவல்துறையினர், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில்  தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

குற்றம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா  காட்சிகளை கொண்டு தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். 

Crime: சேலத்தை அதிரவைத்த கொள்ளை சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது.. நகைகள், இருசக்கர வாகனம் மீட்பு

காவல்துறையினரின் தீவிர தேடுதலில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை காவல்துறையினர், அப்பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த சம்பந்தப்பட்ட கொள்ளையன் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், அவரை பின்தொடர்ந்த காவல்துறையினர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் சம்பந்தப்பட்ட கொள்ளையனை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பன்னத்தூர் கிராமம், பட்டாளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் என்பதும், இவர் தனது நண்பரான திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பதுடன் சேர்ந்து, பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன் வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

Crime: சேலத்தை அதிரவைத்த கொள்ளை சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது.. நகைகள், இருசக்கர வாகனம் மீட்பு

மேலும் கொள்ளையர் கார்த்திக் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே வேறொரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேலுக்கும்  தனக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து புதிதாக பெரிய அளவில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு, கொள்ளை அடிப்பதற்கு முன் பழனி கோவிலுக்கு சென்ற  அவர்கள் இருவரும் அங்கு ஒரு நாள் தங்கி இருந்து, பின்னர் ஈரோடு திரும்பி உள்ளனர். 

ஈரோட்டில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிய  அவர்கள் அங்கிருந்து மேட்டூர் வரும் வழியில், பில்லுக்குறிச்சி பகுதியில் பூட்டி இருந்த விவசாயி கோவிந்தராஜன் வீட்டை கண்டவுடன், அருகில் இருந்தவர்களிடம் விவசாயி கோவிந்தராஜ் வீட்டின் முன் இருந்த டிராக்டரை காண்பித்து,  தாங்கள் டிராக்டர் வாடகைக்கு எடுக்க வந்திருப்பதாகவும், இதன் உரிமையாளர் எங்கே சென்றுள்ளார் என அருகில் இருந்தவர்களிடம்  விசாரித்து தெரிந்து கொண்டவர்கள், டிராக்டரை சுற்றி பார்ப்பதுபோல் பார்த்து, நைசாக வீட்டின் பூட்டை உடைத்து அங்கு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற விவரம் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் கொள்ளையடித்த நகைகளை பிரித்துக் கொண்டு, தனித்தனியே தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினர் தம்மை சுற்றி வைத்து கைது செய்ததாக கொள்ளையர் கார்த்தி கூறியுள்ளார்.

கொள்ளை சம்பவம் ஈடுபட்ட கொள்ளையர் கார்த்தி மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மற்றும் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெற்று சிறை சென்றவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு  இருசக்கரவாகனத்தை மீட்டனர்.  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள நகைகளுடன் தலைமறைவாக  உள்ள மற்றொரு கொள்ளையன் சக்திவேலை தேடிவருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget