மேலும் அறிய

மதுரை சிறையில் சினிமா பாணியில் செல்போன் கடத்தல்.. ஆசன வாயில் பதுக்கிய அதிர்ச்சி சம்பவம், விசாரணை தீவிரம்!

செல்போன் குறித்த விசாரணையில் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறைவாசிகளின் வாக்குமூலம்.

மதுரை மத்திய சிறையில் சினிமா பாணியில் ஆசன வாயிலில் செல்போனை பதுக்கி சிறைக்குள் எடுத்துசென்ற சிறைவாசி, கழிவறையில் பதுக்கிவைத்திருந்த செல்போன் சிம்கார்டு பறிமுதல், 3 சிறைவாசிகள் மீது வழக்குப்பதிவு. - பரபரக்கு மதுரை சிறை!

சிறையின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரி, செல்போன்
 
மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை, ஆயுட்கால தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசி ஒருவரின் அறையில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  காவலர்கள் சிறைவாசிகளின் அறைகளில் தனி தனியாக சோதனையிட்டுள்ளனர். அப்போது சிறைவாசி  செல்வபாண்டி என்பவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய செல்போனை பறிமுதல் செய்தனர் . 
 
விசாரணையில் சிறைவாசிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையடுத்து செல்வபாண்டியிடம் நடத்திய விசாரணையில் அவரது அறையில் இருந்த தண்டனை சிறைவாசிகளான கைதிகள் முத்து இருள் மற்றும் குமார் ஆகிய இருவரும் செல்வபாண்டியிடம் செல்போனை மறைத்துகொடுத்து கழிவறையில் மறைத்து வைப்பதற்காக கொடுத்தது தெரியவந்துள்ளது. பின்னர் மூன்று பேரையும் தனிதனியாக அழைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறைவாசிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆசன வாயில் மறைத்து செல்போனை சிறைக்குள் எடுத்துவந்துள்ளார்
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வழக்கு விசாரணைக்காக மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு முத்து இருள் விசாரணைக்கு சென்றபோது அவரிடம் குமார் 9 ஆயிரம் கொடுத்து செல்போன் வாங்கிவர சொல்லியுள்ளார். பின்னர் கடந்த 10 ஆம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு மதுரை மத்திய சிறைக்கு திரும்பிய முத்து இருள் தனது ஆசன வாயில் மறைத்து செல்போனை சிறைக்குள் எடுத்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
யார் உதவியது என்பது குறித்த விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
 
இதையடுத்து சிறைவாசிகள் முத்து இருள், குமார், செல்வபாண்டி ஆகிய மூவர் மீதும் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சிம் கார்டுடன் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த சிம்கார்டை பயன்படுத்தி யாருடனும் பேசினார்களா என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறைவாசி முத்துஇருளை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள் மற்றும் அவரிடம் எப்படி செல்போன் வந்தது? யார் உதவியது என்பது குறித்த விசாரணையும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் சினிமா பாணியில்  செல்போனை ஆசனவாயில் மறைத்து வைத்து சிறைக்குள் கொண்டு சென்றதை கண்டுபிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget