மேலும் அறிய

Crime : காதலனை விஷம் வைத்துக்கொன்ற இளம்பெண்.. கழிவறை கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சி.. நடந்தது என்ன?

போலிஸ் நிலையத்தின் கழிவறையில் இருந்த போது அந்த பெண் கிருமிநாசினியை உட்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேரளாவில் பிரேக் அப் செய்ய மறுத்ததால், தனது 23 வயது காதலரை விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், காவல்நிலையத்தில் இன்று கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 22 வயது பெண், போலிஸ் நிலையத்தின் கழிவறையில் இருந்த போது கிருமிநாசினியை உட்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஷில்பா, "தற்கொலைக்கு முயற்சி செய்ததை உடனடியாக உணர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கண்காணிக்கப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் விரைவில் பெறப்படும்.

வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், தனது 23 வயது காதலனுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் நேற்று இரவு காவலில் எடுக்கப்பட்டார்" என்றார்.

இது தொடர்பாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி அஜித் குமார், "அக்டோபர் 14ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்த பிறகு, பூச்சிக்கொல்லி கலந்த ஆயுர்வேத கஷாயத்தை அவருக்கு கொடுத்துள்ளார். அந்த நபர் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பிப்ரவரியில் முறிந்தது. ஆனால், அந்த நபர் உறவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பல வழிகளில் அவரைத் தவிர்க்க முயன்றார். ஆனால், எதுவும் பலனளிக்காததால், அவரை ஒழிக்க முடிவு செய்தார். அவருடைய கூற்றுகளிலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்.

இறப்பதற்கு முன், விஷம் கொடுத்ததில் பெண்ணின் பங்கு பற்றி அந்த நபர் எதுவும் குறிப்பிடவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் இதில் சந்தேகித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அக்டோபர் 20ஆம் தேதி அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.

அவரைக் கொல்வதற்காக அந்த பெண் அவருக்கு ஒருவித சாறு அல்லது கஷாயம் கொடுத்ததாக காதலரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது வாக்குமூலம் குறித்த செய்தி வெளியான நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக இளைஞனின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget