மேலும் அறிய

Crime : காதலனை விஷம் வைத்துக்கொன்ற இளம்பெண்.. கழிவறை கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சி.. நடந்தது என்ன?

போலிஸ் நிலையத்தின் கழிவறையில் இருந்த போது அந்த பெண் கிருமிநாசினியை உட்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேரளாவில் பிரேக் அப் செய்ய மறுத்ததால், தனது 23 வயது காதலரை விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண், காவல்நிலையத்தில் இன்று கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 22 வயது பெண், போலிஸ் நிலையத்தின் கழிவறையில் இருந்த போது கிருமிநாசினியை உட்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஷில்பா, "தற்கொலைக்கு முயற்சி செய்ததை உடனடியாக உணர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கண்காணிக்கப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் விரைவில் பெறப்படும்.

வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், தனது 23 வயது காதலனுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பெண் நேற்று இரவு காவலில் எடுக்கப்பட்டார்" என்றார்.

இது தொடர்பாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி அஜித் குமார், "அக்டோபர் 14ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்த பிறகு, பூச்சிக்கொல்லி கலந்த ஆயுர்வேத கஷாயத்தை அவருக்கு கொடுத்துள்ளார். அந்த நபர் 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.

அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு பிப்ரவரியில் முறிந்தது. ஆனால், அந்த நபர் உறவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பல வழிகளில் அவரைத் தவிர்க்க முயன்றார். ஆனால், எதுவும் பலனளிக்காததால், அவரை ஒழிக்க முடிவு செய்தார். அவருடைய கூற்றுகளிலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்.

இறப்பதற்கு முன், விஷம் கொடுத்ததில் பெண்ணின் பங்கு பற்றி அந்த நபர் எதுவும் குறிப்பிடவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் இதில் சந்தேகித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அக்டோபர் 20ஆம் தேதி அவரது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார்.

அவரைக் கொல்வதற்காக அந்த பெண் அவருக்கு ஒருவித சாறு அல்லது கஷாயம் கொடுத்ததாக காதலரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரது வாக்குமூலம் குறித்த செய்தி வெளியான நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக இளைஞனின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்தார்" என்றார்.

தலைப்பு செய்திகள்

இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!
50 ரூபாயால் வந்த வினை! ஜி-பேயில் லஞ்சம் வாங்கி கச்சிதமாகச் சிக்கிய போலீஸ்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல ஜூலை 27-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Embed widget