மேலும் அறிய

தமிழகத்தை உலுக்கிய தற்கொலை.. கண்ணீர் சிந்திய மாணவ, மாணவிகள்... நடந்தது என்ன ?

மருத்துவக் கல்லூரி நிர்வாகம், மற்றும் சக மருத்துவ கல்லூரி மாணவர்கள், மாணவிகள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் அருகே நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது ‌

மாணவியின் அழுகுரல் 

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து வருகின்றன. அதேபோன்று தனியார் மருத்துவமனையிலும், ஆயிரம் கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றன.‌ 

இந்தநிலையில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அங்கேயே உள்ள மாணவர் மாணவியர் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று இரவு நேரத்தில் ஐந்தாவது மாடியில், மாணவி ஒருவர் அழுது கொண்டு கீழே குதிக்க முயற்சி செய்துள்ளார். அந்தப் பகுதியில் இருந்த சிலர் பார்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். 

மாடியில் இருந்து குதித்த மாணவி 

மாடியில் அழுது கொண்டிருந்த மாணவி, திடீரென மாடியில் இருந்து கீழே உதித்து தற்கொலை செய்து கொண்டார். மாடியில் இருந்து குதித்ததால், படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.‌ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த மாணவி, ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்னேரி கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் , உயிரிழந்த மாணவி காதல் தோல்வியால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கல்லூரி மாடியில் இருந்து அழுது கொண்டிருந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவி தற்கொலை குறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் சொல்வது என்ன ?

இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, பொன்னேரிக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 5ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்த, சுமார் 23 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் காதல் தோல்வியால், மருத்துவமனை 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களை பதிவிடவேண்டாம், வதந்தியாக வரும் தகவல்களையும் நம்ப வேண்டாம் என தெரிவித்தனர்.‌ மேலும் உயிரிழந்த மாணவி, வேலூர் சி.ம்.சி மருத்துவமனையில் மனஅழுத்தத்திற்காக உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் மற்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டு மாணவி உடல் அவரது தாய், மற்றும் அண்ணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த மாணவி உடலுக்கு கண்ணீர் விட்டு கதறி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி

எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Embed widget