மேலும் அறிய

லஞ்சமா வாங்குறீங்க லஞ்சம்...! சுத்து போட்டு பிடித்த போலீஸ்..! காஞ்சியில் நடந்தது என்ன ?

Kanchipuram News : காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 1லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு ஊழியர்களை கைது செய்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office

காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பண்ருட்டி பகுதியில் உள்ள தனது மாமியாரின், சொத்துக்களை சிலர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், அந்த பத்திர பதிவினை ரத்து செய்து, வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என  விண்ணப்பித்துள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office
காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office

 

1 லட்சம் ரூபாய் லஞ்சம் 

பத்திரப்பதிவை கேன்சல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய  மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரியும் நவீன்குமார் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கேட்பது குறித்து உலகநாதன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் படி இன்று நவீன் குமாருக்கு லஞ்சம் கொடுக்க சென்று உள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office
காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி

மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்த நவீன் குமாரும், அவருக்கு உதவியாக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் சந்தோஷ் பாபு  ஆகிய இருவரும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி உள்ளனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், மாவட்ட பதிவாளர்  அலுவலக ஊழியர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office
காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - kanchipuram district registrar office

 

மேலும் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து உதவி அலுவலர் நவீன் குமார் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சந்தோஷ் பாபு ஆகிய இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிப்பது எப்படி ?

அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர்" - குலாம் நபி ஆசாத் பேச்சால் சர்ச்சை

ஆந்திராவிலிருந்து இப்படியும் தமிழகம் வரும் கஞ்சா...! தலைசுற்ற வைக்கும் கஞ்சா பிரச்சனை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget