மேலும் அறிய

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

மருத்துவ முகாம்:

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முழு உடல் பரிசோதனை முகம்:

மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 என மொத்தம் 610 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ்ரே உட்பட முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் உடல் நலப் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லியோ,உதவி நிலை மருத்துவ அதிகாரி அருணா முத்து மகேஷ், டாக்டர் நல்லதம்பி மற்றும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு நன்றி:

உடல் பரிசோதனைகள் செய்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், வெளி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் ஆவது செலவாகும். ஆனால் மாநகராட்சி சார்பில் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளும் எங்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஏற்பாடுகள் செய்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதில் உடல் நலக் குறைபாடு இருந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இதையும் படிங்க:TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

மேயர் பேசுகையில்..

இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தான ஒன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில் பல்வேறு திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்காக முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகரத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முழு உடற் பரிசோதனை நடத்தப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தில் மாநகராட்சி நிர்வாகம் எப்பொழுது சிறப்பு கவனம் செலுத்தும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget