மேலும் அறிய

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

மருத்துவ முகாம்:

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முழு உடல் பரிசோதனை முகம்:

மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 என மொத்தம் 610 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ்ரே உட்பட முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் உடல் நலப் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லியோ,உதவி நிலை மருத்துவ அதிகாரி அருணா முத்து மகேஷ், டாக்டர் நல்லதம்பி மற்றும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு நன்றி:

உடல் பரிசோதனைகள் செய்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், வெளி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் ஆவது செலவாகும். ஆனால் மாநகராட்சி சார்பில் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளும் எங்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஏற்பாடுகள் செய்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதில் உடல் நலக் குறைபாடு இருந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இதையும் படிங்க:TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

மேயர் பேசுகையில்..

இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தான ஒன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில் பல்வேறு திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்காக முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகரத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முழு உடற் பரிசோதனை நடத்தப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தில் மாநகராட்சி நிர்வாகம் எப்பொழுது சிறப்பு கவனம் செலுத்தும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget