மேலும் அறிய

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

மருத்துவ முகாம்:

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முழு உடல் பரிசோதனை முகம்:

மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 என மொத்தம் 610 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ்ரே உட்பட முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் உடல் நலப் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லியோ,உதவி நிலை மருத்துவ அதிகாரி அருணா முத்து மகேஷ், டாக்டர் நல்லதம்பி மற்றும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு நன்றி:

உடல் பரிசோதனைகள் செய்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், வெளி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் ஆவது செலவாகும். ஆனால் மாநகராட்சி சார்பில் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளும் எங்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஏற்பாடுகள் செய்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதில் உடல் நலக் குறைபாடு இருந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இதையும் படிங்க:TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

மேயர் பேசுகையில்..

இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தான ஒன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில் பல்வேறு திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்காக முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகரத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முழு உடற் பரிசோதனை நடத்தப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தில் மாநகராட்சி நிர்வாகம் எப்பொழுது சிறப்பு கவனம் செலுத்தும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget