மேலும் அறிய

கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

கள்ளக்குறிச்சியில் உருவக்கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன், சக நண்பனை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உருவகேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன் சக நண்பனை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோகுல்ராஜ்.இவர் கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், அன்று இரவு மகன் வீடு திரும்பாததால் அவருடைய செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி மாணவனின் நண்பர்கள் பலரிடமும் கோகுல்ராஜ் குறித்து விசாரித்துள்ளனர். இருப்பினும் கோகுல்ராஜ் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் அச்சம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் அன்று இரவு, திருக்கோவிலூர் புறவழிச்சாலை அருகே கோகுல்ராஜ் படித்து வந்த பள்ளியின் பின்புறம் அரிவாளால் வெட்டப்பட்டு உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு அது கோகுல்ராஜ்தான் என அடையாளம் கண்டுள்ளனர்.


கள்ளக்குறிச்சி:  விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

இதனை தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கோகுல்ராஜூடன் பயின்ற சக மாணவர் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவர் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து குண்டாக இருப்பதாக கூறி உடல் கேலி செய்ததாகவும், பலமுறை எச்சரித்தும் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி:  விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

தொடர்ச்சியாக சேர்த்துவைத்த ஆத்திரத்தால் கோகுல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறிய மாணவன் பள்ளிக்கு பின்புறம் வைத்து உணவு உட்கொண்டுவிட்டு ஓய்வெடுத்த கோகுல்ராஜை அரிவாளால் பின்புறம் இருந்து வெட்டியதாகவும், ஆத்திரம் தீர கத்தியால் கோகுல்ராஜின் உடலை கீறியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவரை கொலை குற்ற வழக்கில் கைது செய்த போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கி பள்ளியில் சேர்த்துள்ளனர். உருவக்கேலி செய்ததால் நண்பனை நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read:பழனி கோவிலில் அறநிலையத்துறை பணிகள்..விண்ணப்பிப்பவர்கள் கவனத்துக்கு..

சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget