Abp nadu exclusive: குவியல், குவியலாக மதுபாட்டில்கள்: சிவகங்கை அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் விற்பனையா ?
”மருத்துமனையில் பணியாற்றும் முக்கிய ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த மதுபாட்டில்களை சப்ளை செய்வதாக தகவல் வெளியாகிறது. அவரை கண்காணித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, காளையார்கோயில், திருப்புவனம், பரமக்குடி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயிகள் பயன்பெறுவது குறிப்பிடதக்கது. சிவகங்கை மருத்துவ கல்லூரி சமீபகாலமாக வினோத நோய்களுடன் வரும் நோயாளிகளைக் கூட பூரண குணடமடைய செய்து பொதுமக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி&மருத்துவமனை வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) April 19, 2022
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.Further reports to follow - @abpnadu pic.twitter.com/n4u40URsaG























