நண்பர்களோடு சேர்ந்து மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; அந்தரங்க உறுப்பில் சிகரெட் சூடு - கணவர் உள்பட 5 பேர் கைது
பாதிக்கப்பட்ட பெண் பண்ணை வீட்டில் இருந்து தப்பிச் சென்று சத்தீஸ்கரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

32 வயதுடைய பெண் ஒருவரை அவரது கணவர் உட்பட 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது. மேலும், கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தனது கணவர், இயற்கைக்கு மாறான உடலுறவில் தன்னை ஈடுபடுத்தியதாகவும், தனது அந்தரங்கப் பகுதிகளில் சிகரெட்டை வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறினார். பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.மேலும் படிக்க: Crime | மூன்று சிறுமிகள் உட்பட 4 பேரை வன்கொடுமை செய்து கால்வாயில் வீச்சு..சீரியல் கில்லரை பிடித்தது காவல்துறை..
இந்தூரின் ஷிப்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நவம்பர் 2019 மற்றும் அக்டோபர் 2021க்கு இடையில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சத்தீஸ்கரை மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தூரை சேர்ந்த ஒருவரை திருமண இணையதளத்தில் சந்தித்த பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் கூறப்படுகிறது.மேலும் படிக்க: பெண்ணை அடித்து உதைத்த ஆட்டோ டிரைவர்..! குத்திக்கொன்ற மர்மநபர்கள்...! என்ன நடந்தது?

பாதிக்கப்பட்ட பெண் பண்ணை வீட்டில் இருந்து தப்பிச் சென்று சத்தீஸ்கரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அவருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அவரைப் பின்தொடர்ந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம் - மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை முயற்சி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















