மேலும் அறிய

ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!

ஸ்பெயினில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த கொரியா் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ஸ்பெயினிலிருந்து புதுவை மாநிலம் ஆரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அலுவலர்களுக்கு சந்தகேம் ஏற்பட்டதால் அப்பார்சலை அவர்கள் திறந்து பார்த்தனர்.


ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!
அந்த பார்சலை திறந்து பார்த்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது , அந்தப் பார்சலில் 994 போதை மாத்திரைகளும் ( எக்ஸ்டஸி மாத்திரை: ), 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சம். இதையடுத்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பார்சலில் உள்ள ஆரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!
 
அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோ்ந்த ரூபக் மணிகண்டன்(29), லாய் விகூஸ்(28) ஆகிய இருவர் இருந்தனா். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அங்கு இரு பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இருவரும் இயற்கை ஓவிய கலைஞர்கள் என்பது தெரிந்தது. 

ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!
மேலும், இவர்கள் இதேபோல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவர்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அதேபோல் ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து கஞ்சா போதைப்பொருளையும் வாங்கிவந்து விற்பனை செய்திருக்கின்றனர்.இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்
 

ஸ்பெயின் நாட்டில் கடத்தி வந்த போதை பொருள் சிக்கியது: இருவர் கைது!
[tw]
எக்ஸ்டஸி மாத்திரை :-
 
எக்ஸ்டஸி என்பது ஒரு சட்டவிரோதமான மருந்து ஆகும், இது செயல்பாட்டு மூலப்பொருள் MDMA ( 3,4- மீத்திலென்டைக்ஸ் மெயாம்பேட்டமைமைன் ) கொண்டிருக்கிறது. இது தூண்டுதல்கள் மற்றும் ஹலசினோஜென்களுடன் தொடர்புடையது மற்றும் மனநிலை மற்றும் உணர்வுகள் ஆகியவற்றின் விளைவுகளை உருவாக்குகிறது.

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget