மேலும் அறிய

இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!

கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண்ணின் தந்தை உள்பட குடும்பத்தினர் காதலர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயவாடாவை மாவட்டத்தில் உள்ளது சலடஹில் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர். 18 வயதான படிகர் அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். பந்தகிசாப்பும் பசவராஜை விரும்பியுள்ளார்.

இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரமும் டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. பசவராஜ் தலித் என்பதாலும், வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பந்தகிசாப்பின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பசவராஜிடம் தனது பெண்ணை காதலிப்பதை கைவிட்டுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், பசவராஜூம், பந்தகிசாப்பும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது வீட்டிற்கு தெரியாமல் வெளியே சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலர்களாக பசவராஜூம், டவால்பி பந்தகிசாப்பும் வயல்வெளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பந்தகிசாப்பின் உறவினர்கள், பந்தகிசாப்பின் தந்தையிடம் இந்த விவகாரத்தை கூறியுள்ளனர்.




இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!

இதனால் கடுமையாக ஆத்திரம் அடைந்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் வயல்வெளிக்கு விரைந்து வந்துள்ளனர். கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த அவர்கள் வந்தபோது, வயல்வெளியில் பந்தகிசாப்பும், பசவராஜூம் பேசிக்கொண்டிருந்ததை கண்டு மேலும் கோபம் அடைந்தனர். இதனால், ஆத்திரத்தில் பசவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பந்தகிசாப்பையும் அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர், காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதையறிந்த பசவராஜூன் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு பதறியடித்து சென்றுள்ளார். அங்கு, பந்தகிசாப்பின் தந்தையிடமும், சகோதரர்களிடமும் தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.

ஆனால், பசவராஜூன் தாய் கதறியதை சிறிதும் பொருட்படுத்தாமல் பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பசவராஜ் மற்றும் பந்தகிசாப் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். கத்தியால் குத்தியும் ஆத்திரம் அடங்காத அவர்கள், காதலர்கள் இருவரது தலையிலும் கல்லைப் போட்டு பசவராஜ் தாயின் கண் முன்னே  கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பசவராஜ் மற்றும் பந்தகிசாப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget