மேலும் அறிய

இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!

கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண்ணின் தந்தை உள்பட குடும்பத்தினர் காதலர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயவாடாவை மாவட்டத்தில் உள்ளது சலடஹில் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர். 18 வயதான படிகர் அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். பந்தகிசாப்பும் பசவராஜை விரும்பியுள்ளார்.

இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரமும் டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. பசவராஜ் தலித் என்பதாலும், வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பந்தகிசாப்பின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பசவராஜிடம் தனது பெண்ணை காதலிப்பதை கைவிட்டுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், பசவராஜூம், பந்தகிசாப்பும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது வீட்டிற்கு தெரியாமல் வெளியே சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலர்களாக பசவராஜூம், டவால்பி பந்தகிசாப்பும் வயல்வெளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பந்தகிசாப்பின் உறவினர்கள், பந்தகிசாப்பின் தந்தையிடம் இந்த விவகாரத்தை கூறியுள்ளனர்.




இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!

இதனால் கடுமையாக ஆத்திரம் அடைந்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் வயல்வெளிக்கு விரைந்து வந்துள்ளனர். கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த அவர்கள் வந்தபோது, வயல்வெளியில் பந்தகிசாப்பும், பசவராஜூம் பேசிக்கொண்டிருந்ததை கண்டு மேலும் கோபம் அடைந்தனர். இதனால், ஆத்திரத்தில் பசவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பந்தகிசாப்பையும் அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர், காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதையறிந்த பசவராஜூன் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு பதறியடித்து சென்றுள்ளார். அங்கு, பந்தகிசாப்பின் தந்தையிடமும், சகோதரர்களிடமும் தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.

ஆனால், பசவராஜூன் தாய் கதறியதை சிறிதும் பொருட்படுத்தாமல் பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பசவராஜ் மற்றும் பந்தகிசாப் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். கத்தியால் குத்தியும் ஆத்திரம் அடங்காத அவர்கள், காதலர்கள் இருவரது தலையிலும் கல்லைப் போட்டு பசவராஜ் தாயின் கண் முன்னே  கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பசவராஜ் மற்றும் பந்தகிசாப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget