மேலும் அறிய

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு விற்பனையில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.

சீர்காழி அருகே கீழக்கரையில் பதுக்கிவைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டவரை 100 லிட்டர் சாராயத்துடன் பிடித்து காவல்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகங்கள், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்கக்கூடாது என அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் அதுக்காக ஏங்கி தவிக்கும் சூழல் நிலவி வருகிறது. 

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

குறிப்பாக மதுவிற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர். 

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழக்கரை கிராமத்தில் முருகேஸ்வரி என்ற பெண் சாராய வியாபாரியும் அவரது உறவினரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை பலமுறை கிராமமக்கள் எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் சாராய விற்பனையை தொடர்ந்துள்ளார். தற்போதைய கொரோனா தொற்று ஊரடங்கிலும் தடையை மீறி சாராயம் விற்பனை செய்ததுடன் பல பகுதிகளுக்கும் மொத்த வியாபாரமும் செய்துள்ளார். 

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு பாக்கெட் போட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சாராயம் விற்பனை செய்யும் இடத்தை முற்றுகையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர். 

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த திருவெண்காடு காவல்நிலைய காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்த கலைச்செல்வன் என்பவரை பிடித்து, வழக்கு பதிவு செய்து,  தலைமறைவான பெண் சாராய வியாபாரி முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!

மேலும் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 820 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இது போன்று ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனையில் ஈடுபட்டும் நபர்களால் தான் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டும் நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையிலும்  இதுபோன்ற செயல்கள் தொடர்வது காவல்துறையில் உள்ள குறைபாட்டை காட்டுவதாகவும், இதனை சரி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget