![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்!
ஒசூர் பகுதியில் அரசுக்கல்லூரி மாணவர் கல்லால் தாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்! Government college student brutally murdered by stone, police recover body recovered ‛பார்ட் டைம்’ பணி செய்த அரசுக் கல்லூரி மாணவர் படுகொலை: பின்னணி தெரியாமல் போலீஸ் குழப்பம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/263255bf771c32b63cb484a9b683b8cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவில் பின்பாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக. அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ஒசூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் சென்று பார்த்தபோது இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் இளைஞர் தலையில் கல்லால் தாக்கி கொடுரனமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் அந்த கொலைசெய்யப்பட்ட இளைஞர் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா என்பவரின் மகன் சேக் முகமது அப்சல் வயது (21) .தற்போது கல்லூரியில் விடுமுறை என்பதால் தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமான் ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா என்பவர் வீட்டில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளது.
இளைஞர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அப்சலின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஷேக் முகமது அப்சல் ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ஷேக் முகமது அப்சல் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று பயின்றுவிட்டு. அதன் பிறகு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேரமாக பணியாற்றுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று கல்லூரி முடித்துவிட்டு, மாலைநேரத்தில் தொழிற்சாலைக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் ஷேக் முகமது அப்சல் காலை முதல் வீடு திரும்பாத நிலையில் இருந்தார் அவரது வீட்டில் தொழிற்சாலைக்கு அவருடன் பணி புரியும் நபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது ஷேக் முகமது அப்சல் வேலைகளை முடித்துவிட்டு காலையிலேயே சென்று விட்டார் எனக் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோர் உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.அதன் பின்னர் ஷேக் முகமது அப்சல் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து இளைஞருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சடலமாக மீட்கப்பட்டார்இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்கல்லூரி மாணவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)