மேலும் அறிய

Kim Jong Un | 2025 வரைக்கும் கொஞ்சமாக சாப்பிடுங்க.. இது அவசர நிலை.. மக்களுக்கு ஆர்டர் போட்ட கிம் ஜோங் உன்..!

2025 வரைக்கும் கொஞ்சமா சாப்பிடுங்கள் என்ற தனது சொந்த நாட்டு மக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் ஒரு நாட்டின் அதிபர்.

2025 வரைக்கும் கொஞ்சமா சாப்பிடுங்கள் என்ற தனது சொந்த நாட்டு மக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் ஒரு நாட்டின் அதிபர். அட வேற எங்கும் இல்லைங்க. சர்ச்சைகளுக்குப் பெயர் போன வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வட கொரியாவைப் பற்றி வரும் செய்திகளில் பெரும்பாலானவை அந்நாட்டில் நடைபெறும் அணு ஆயுத ஏவுகணை சோதனை தொடர்பானதாகவே இருக்கும். இதனாலேயே வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

ஏற்கெனவே இப்படி கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியா தற்போது கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. வடகொரியா உணவுப் பொருட்களின் தேவை பெரும்பாலும் இறக்குமதியாலேயே நிறைவேறி வந்தது. இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 2019ல் உலகை ஆட்கொண்டது கொரோனா. அதன் பின்னர் தனது நாட்டின் எல்லைகளை வட கொரியா மூடியது. குறிப்பாக சீனாவுடனான எல்லையை 2020 ஜனவரியில் முற்றிலுமாக மூடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ள வரும் 2025 வரை சீனாவுடனான எல்லையைத் திறக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2025 வரைக்கும் கொஞ்சமா சாப்பிடுங்கள் என்ற தனது சொந்த நாட்டு மக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரியா நாட்டு அதிபர் கிம்ஜோங் உன். ஏற்கெனவே அந்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு டஜன் வாழைப்பழத்தை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3000 கொடுக்க வேண்டும். அதுவும் பணம் இருந்தால் கூட நினைத்ததை எல்லாம் வாங்கிவிட முடியாது. ஒரு நபருக்கு இவ்வளவு தான் உணவுப் பொருள் என்று அளந்து அளந்து தான் விற்பனையும் நடக்கிறது. இறக்குமதிகளை முற்றிலுமாக முடக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் உணவு கிடைக்கல் அல்லல்படுகின்றனர்.


Kim Jong Un | 2025 வரைக்கும் கொஞ்சமாக சாப்பிடுங்க.. இது அவசர நிலை.. மக்களுக்கு ஆர்டர் போட்ட கிம் ஜோங் உன்..!

மக்காச்சோளம், காய்கறி, பழங்கள் உள்ளிட்டை முடிந்தவற்றை தாங்களே விளைவிக்குமாறு அரசாங்கம் ஊக்குவிக்கிறது. வடகொரியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. கடுமையான பனிப்பொலிவுடன் கூடிய குளிர்காலம் அங்கு நிலவும். குளிர் காலத்தில் எப்போதுமே வடகொரியா அதிகளவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இறக்குமதியும் இல்லை. உள்நாட்டில் விளைச்சலுக்கும் வாய்ப்பில்லை என்ற சூழலில் அதிபர் 2025 வரை குறைவாக சாப்பிடுங்கள் என்று கூறியிருப்பது அந்நாட்டு மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 2025 வரை உயிர் பிழைப்போமே என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். 

வட கொரியாவுக்கு உணவுப் பஞ்சம் புதிதல்ல எனக் கூறுகிறது வரலாறு. 1990களில் கடும் உணவுப் பஞ்சத்தை வட கொரியா சந்தித்தது. அப்போது லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அதேபோன்றதொரு சூழலை நோக்கி வட கொரியா செல்கிறது/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget