மேலும் அறிய

மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

மது போதையில் வாலிபரை அடித்து கொன்றுவிட்டு விபத்து ஏற்பட்டது போல் மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது

நெல்லை பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (27). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த  நிலையில்  நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் டக்கரம்மாள்புரம் -ரெட்டியார்பட்டி சாலையில் சிஎஸ்ஐ சர்ச்க்கு சொந்தமான காலியிடத்தில் ரெட்டியார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம்,  தனது நண்பர்களான முருகேசன் கொம்பையா, சரவணன், வெங்கடேஷ் ஆகியோருடன்  மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே சிவன் நம்பி, செல்வம், செந்தில்முருகன், பொன்பாண்டி ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.


மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

அப்போது இதனை பார்த்த சுப்பிரமணியன் சிவ நம்பியிடம் இங்கு எப்படி வந்து நீங்கள் மது குடிக்கலாம் என்று கூறி பாட்டிலால் தாக்கியுதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சிவன்நம்பி தரப்பினர் சுப்பிரமணியனை பிடித்து தள்ளியுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியனை சிவன் நம்பி மற்றும் 3 பேர் சேர்ந்து சரமாரியாக மிதித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சுப்பிரமணியன் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த சிவன் நம்பி மற்றும் அவரது நண்பர்கள் சுப்ரமணியனை மீட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மது போதையில் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் யாரும் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.


மது போதை வெறியில் வாலிபரை அடித்துக்கொன்று, விபத்து போல் நாடகமாடிய 4 பேர் கைது

பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுப்பிரமணியனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மருத்துவமனை போலீசார் கேட்டபோது சுப்பிரமணியன் விபத்தில் கீழே விழுந்ததாக முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர், அப்போது மது குடிப்பதில் ஏற்பட்ட மோதலின் போது சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.  இதைத்தொடர்ந்து பெருமாள்புரம் போலீசார் சிவன் நம்பி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொலை சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget