மேலும் அறிய

Crime: 3 குழந்தைகள் கொலை.. 2-வது கணவருடன் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

கேரளாவில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு இரண்டாவது கணவருடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளை கொன்று விட்டு இரண்டாவது கணவருடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செறுபுழா பகுதியின் நகுடி என்ற ஏரியாவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா.  38 வயதான இவருக்கு திருமணமாகி சூரஜ், சுபின், சுரபி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவர் சுனில் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீஜா கணவரை ஒரே வீட்டில் தனி அறையில் தனது 3 குழந்தைகளுடன் வசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் செறுபுழாவைச் சேர்ந்த் 40 வயதான ஷாஜி என்பவர் ஸ்ரீஜாவுக்கு அறிமுகமானார். 

ஏற்கனவே ஷாஜிக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இப்படியான சூழலில் இருவரும் முதலில் நண்பர்களாக பழக தொடங்கியுள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில் ஷாஜி - ஸ்ரீஜா இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே 16 ஆம் தேதி விமரிசையாக மறுமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். 

இதனிடையே நேற்று காலை ஸ்ரீஜா வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அதேசமயம் திடீரென அவர்கள் வீட்டுக்கு போலீசார் வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கூட்டம் ஸ்ரீஜா வீட்டை சுற்றிக் கூடியது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தப்போது 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, ஸ்ரீஜா - ஷாஜி இருவரும் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையில் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஸ்ரீஜா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில் சுனில் குமார் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்ரீஜா மற்றும் ஷாஜி மீது போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தம்பதியினரை வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நேற்று  (மே 24) பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஸ்ரீஜாவை அழைத்துள்ளனர்.

ஆனால் காலை 6.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு ஸ்ரீஜா போன் செய்துள்ளார். தான் 3 குழந்தைகளை கொன்று விட்டதாகவும், தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது வீட்டுக்குள் போவதற்குள் இத்தகைய துயர சம்பவம் நடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget