மேலும் அறிய

Crime: தனியார் செயலியில் கடன் வாங்கிய பெண்ணை மிரட்டி ரூ.16.31 லட்சம் பணம் பறிப்பு

மார்பிங் செய்து புகைப்படத்தை வெளியிடுவோம் என்று கூறி பட்டதாரி பெண்ணை மிரட்டி ரூ. 16.31 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தனியார் செயலில் முயன்ற போது பெண்ணின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் அவருடைய புகைப்படம் ஆகியவற்றை பதிவிடும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் இருந்த அனைத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சில நிமிடங்களில் பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.20 ஆயிரம் வந்துள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த பட்டதாரி பெண் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டார்.


இந்நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் என் வங்கி கணக்கிற்கு மேலும் பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் தன்னுடைய அம்மாவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினர்.

இருப்பினும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது. இதனை அந்த பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதுமாக இருந்தார். இதன்படி பல்வேறு தவணைகளாக ரூ.16.31 லட்சம் பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து மிரட்டல் வரவே அந்த பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் ( பொ ) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



சுற்றுலாவாக வந்த பெண் மயங்கி விழுந்து பலி

தஞ்சைக்கு சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராமன் ஜினப்பா. இவர் தனது பட்டதாரி மகளான நவீனா (25 ) மற்றும் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலாவாக வந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

கடைசியாக தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி செல்ல நினைத்தனர். அதன்படி கடந்த 31-ந் தேதி பெரிய கோவிலுக்கு சுற்றி பார்க்க வந்தனர். கோவிலை சுற்றி பார்த்து கொண்டிருந்த போது நவீனா திடீரென மயங்கி விழுந்தார்.

உடன் அவரை குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நவீனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை ராமன்ஜினப்பா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget