Crime : வயசெல்லாம் வெறும் நம்பர்தான்ப்பா.. பேசிப்பேசி பள்ளி மாணவனை ஏமாற்றி செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது..
ஆன்லைன் வகுப்பில் அந்த மாணவனை குறி வைத்த ஆசிரியை வார இறுதியில் மாணவனை அழைத்துக்கொண்டு காரில் சுற்றியுள்ளார்

வயது என்பது வெறும் நம்பர்தான் எனக்கூறி பள்ளி மாணவரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் வால்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா வில்லியம்ஸ். 21 வயதான இவர் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை தன்னுடைய பாலியல் ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் அந்த இளம் ஆசிரியை. ஆன்லைன் வகுப்பில் அந்த மாணவனை குறி வைத்த ஆசிரியை வார இறுதியில் மாணவனை அழைத்துக்கொண்டு காரில் சுற்றியுள்ளார். பின்னர் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
வேலூரில் பிஸ்கட் வியாபாரியின் வீட்டின் பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

பின்னர் சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் மாணவனை செல்போனில் அழைத்த ஆசிரியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து மாணவனிடம் பாலியன் உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதால் அந்த மாணவன் ஆசிரியையை வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து பாலியல் ரீதியாக மன உளைச்சல் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக பதிவுசெய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆசிரியைக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
உறவினர் பெண்ணின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - கொல்கத்தாவில் கொடூர சம்பவம்
சிக்கியது எப்படி?
மாணவருடன் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை என பலரும் வில்லியம்சை கிண்டல் செய்துள்ளனர். இந்த விவகாரம் பின்னர் பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு வரவே வில்லியம்சிடம் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளனர். பின்னர் தான் செய்த குற்றத்தை ஆசிரியை ஒப்புக்கொண்டு மாணவன் குறித்தும் கூறியுள்ளார்.
இதேபோல் இங்கிலாந்தில் மற்றொரு சம்பவமும் நடந்தது. இங்கிலாந்தில், 14 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட ஆசிரியை ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவன் இங்கிலாந்தின் சிறிய நகரமான ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஹோடெஸ்டனில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான், அங்கு 23 வயதான ஹன்னா ஹாரிஸ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவர் தன்னை அந்த மாணவனின் பெற்றோரிடம் அவன் காதலிக்கும் பெண்ணின் தாய் எனக் கூறி ஏமாற்றியுள்ளார், ஆனால் அப்படி ஒரு காதலியே அந்த மாணவனுக்கு இல்லை என்று தெரியவந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த ஆசிரியை பிடிபட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















