மேலும் அறிய

Crime: மருத்துவமனையில் 7 குழந்தைகள் கொடூரமாக கொலை.. செவிலியருக்கு வாழ்நாள் சிறை விதித்த நீதிமன்றம்..

இங்கிலாந்தில் 7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இங்கிலாந்தில் 7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றது. அதேசமயம் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது என நடந்த சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற செவிலியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த செவிலியர் குழந்தைகள் மரணம் அதிகரித்த நேரத்தில் பணியாற்றி வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாகமும் உறுதிப்படுத்திய நிலையில், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் குழந்தைகளின் சிகிச்சையின் போது பயன்படுத்த மருத்துவ குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அவர் மீது  மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நோய்வாய்ப்பட்ட மற்றும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் கொடுத்தும், இன்சுலினுடன் விஷத்தை ஏற்றியும், குழந்தைகளுக்கு இரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும் 7 குழந்தைகளை கொன்றார். மேலும்  6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் லூசி லெட்பி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தண்டனைக்கான வாதம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக செவிலியர் லூசி லெட்பி மிகவும் கொடூரமான குற்றங்களை செய்திருப்பார். எனவே அவர் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினர். அவர் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் லூசி லெட்பிக்கு முன்பாக 3 பெண்ணுக்கு மட்டுமே வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget