மேலும் அறிய

காஞ்சிபுரம்: தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் மாற்றுத்திறனாளி தற்கொலை

’’2,11,734 கடனில் 1,68,354 ரூபாயை மனோகரன் திருப்பி செலுத்தி உள்ளார்’’

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வில்லிவலம் வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்.  இவர் மாற்று திறனாளியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு  தனியார் நிறுவனத்தில் மனோகரன் 2,11,734/- கடன் பெற்றுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவருடைய ஜாமினில் ராமகிருஷ்ணன் என்பவரது பெயருக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அந்த கடன் தொகையில் 1,68,354 ரூபாயை மனோகரன் திருப்பி செலுத்திய நிலையில் 43,380 ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
 

காஞ்சிபுரம்: தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் மாற்றுத்திறனாளி தற்கொலை
 
இதை வசூல் செய்ய நிறுவனத்தின் ஆட்கள் மனோகரன் வீட்டிற்கும், ராமகிருஷ்ணன் வீட்டிற்கும் சென்று மிரட்டி உள்ளனர். பதில் சொல்ல இயலாமல் நிறுவனத்திற்கு மனோகரனே நேரில் சென்று அவகாசம் தர கெஞ்சியுள்ளார். விட்டில் உள்ளவர்களை மிரட்டியதால் காவல் நிலையத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை ஏதும் செய்யாததால் மீண்டும் நிறுவனத்திற்கு சென்று அவகாசம் தரக் கோரியுள்ளார். இந்த நிலையில் அவர் மனைவிக்கும் அவரது ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில் மூன்று மாத காலமாக தவணைத் தொகை செலுத்தாத நிலையில் கடனை செலுத்தகோரி தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. 
 
காஞ்சிபுரம்: தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் மாற்றுத்திறனாளி தற்கொலை
 
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தக் கோரி மனோகரனை அவர் வீட்டு வாசலில் வைத்து ஊழியர்கள் கிராம மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து வேதனையுடன் இருந்த விவசாயி மனோகரன் பைனான்ஸ் நிறுவன வாசலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
காஞ்சிபுரம்: தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் மாற்றுத்திறனாளி தற்கொலை
இந்த சூழலில் விவசாயி மனோகரன் உயிரிழப்புக்கு காரணமான தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மனோகரின் உறவினர்கள் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் பைனான்ஸ் ஊழியர்கள் அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cabinet Decision: மாற்றியமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு.. மத்திய அரசின் திட்டம் என்ன.?
மாற்றியமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு.. மத்திய அரசின் திட்டம் என்ன.?
"அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!
TN Ministers: எங்க சார் இருக்கீங்க? - வேலை நடக்குதா? பாக்கவே முடியலையே? அமைச்சர்களை தேடும் மக்கள்..!
TN Ministers: எங்க சார் இருக்கீங்க? - வேலை நடக்குதா? பாக்கவே முடியலையே? அமைச்சர்களை தேடும் மக்கள்..!
Bengaluru Chennai Expressways: சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, 262 கிமீ., எகிறும் நிலங்களின் மதிப்பு - ரியல் எஸ்டேட்டில் கோடிகள்
Bengaluru Chennai Expressways: சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, 262 கிமீ., எகிறும் நிலங்களின் மதிப்பு - ரியல் எஸ்டேட்டில் கோடிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cabinet Decision: மாற்றியமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு.. மத்திய அரசின் திட்டம் என்ன.?
மாற்றியமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு.. மத்திய அரசின் திட்டம் என்ன.?
"அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!
TN Ministers: எங்க சார் இருக்கீங்க? - வேலை நடக்குதா? பாக்கவே முடியலையே? அமைச்சர்களை தேடும் மக்கள்..!
TN Ministers: எங்க சார் இருக்கீங்க? - வேலை நடக்குதா? பாக்கவே முடியலையே? அமைச்சர்களை தேடும் மக்கள்..!
Bengaluru Chennai Expressways: சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, 262 கிமீ., எகிறும் நிலங்களின் மதிப்பு - ரியல் எஸ்டேட்டில் கோடிகள்
Bengaluru Chennai Expressways: சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை, 262 கிமீ., எகிறும் நிலங்களின் மதிப்பு - ரியல் எஸ்டேட்டில் கோடிகள்
Trump on Trade Deal: இந்தியாவுக்கு நிம்மதி.. விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. ட்ரம்ப் சொன்னது என்ன.?
இந்தியாவுக்கு நிம்மதி.. விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. ட்ரம்ப் சொன்னது என்ன.?
TVK Vijay: கோவையில் தவெக அட்ராசிட்டி! சுய ஒழுக்கம் முக்கியம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் கட்டளை
TVK Vijay: கோவையில் தவெக அட்ராசிட்டி! சுய ஒழுக்கம் முக்கியம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் கட்டளை
DMDK Vijayaprabakaran: தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் ஆனார் விஜயபிரபாகரன்...
தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் ஆனார் விஜயபிரபாகரன்...
Grand Vitara 7 Seater: மஹிந்திராவிற்கு ஆப்பு? 7 சீட்டர் கிராண்ட் விட்டாரவை களமிறக்கும் மாருதி - இவ்ளோ அம்சங்களா..!
Grand Vitara 7 Seater: மஹிந்திராவிற்கு ஆப்பு? 7 சீட்டர் கிராண்ட் விட்டாரவை களமிறக்கும் மாருதி - இவ்ளோ அம்சங்களா..!
Embed widget